மன உறுதி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.07.2024

என்னால் முடியும் என நம்பாமல் நீங்கள் எந்தக் காரியத்திலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை,

நாம் தொடங்குகின்ற காரியம்
நல்லவிதமாக முடியும் என்கிற நம்பிக்கை, அந்தக்  காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும். இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்,

அசைக்க முடியாத உறுதியான எண்ணத்தைத் தான் நம்பிக்கை என்று சொல்லுகிறோம்.

நம்பிக்கை தொடர்ந்து செயல்படுகின்ற பொழுது மாற்றங்கள் ஏற்படுகின்றன,

ஒரு வருடம் என்பது
முன்னூற்றி அறுபத்தைந்து
வாய்ப்புகள் கொண்டது,
பயன்படுத்துங்கள்.

தோல்விகள் எவ்வளவு ஏற்பட்டாலும் மனம் உறுதியாக இருந்தால் அவையே வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன.

விடாமல் முயலுங்கள், முடியும் என்று முயலுங்கள்.

உருகினாலும் உறைந்தாலும் தன் தன்மை மாறாதிருக்கும்
நீரைப் போல,

எச்சூழலிலும் உன் தன்மையை மாற்றிக் கொள்ளாதே,

எத்தனைக் கைகள் உன்னைக் கீழே தள்ளி விட்டாலும், நம்பிக்கை எனும் கை உன்னை உயரத்திற்குக் கொண்டு செல்லும். ஆகையால் முயற்சி செய்யுங்கள், 
வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி