அனுபவம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.08.2024

அனுபவம் சிலருக்கு
மகிழ்ச்சியைத் தரும்
சிலருக்கு வலிகளையும் தரும்.

மகிழ்ச்சியான அனுபவத்தை மனதில் வை. 
வலிகள் நிறைந்த அனுபவத்தை நீ வாழ்வில் முன்னேறும் ஏணிப் படிகளாக வை.

எத்தனை வலிகள் வந்தாலும், ஏதாவது ஒரு வழி உண்டு.

தட்டிய கதவுகள் தான் திறக்கப்படும்.

சிந்தனை முழுக்க வலியின் மேல் வைக்காமல்
வழிகளின் மேல் செலுத்து.

விழிகளை மூடாது, ஓயாது போராடி
கொண்டே இரு.

வலிகள் என்று வாடி நின்றால் வராது வாழ்வில் வசந்தம்.

முடியாது என்று மூலையில் முடங்கி கிடந்தால் விடியாது உன் பொழுதுகள். 

முடியும் என்று முயற்சித்தால்  உன் முழு நாளும் முன்னேற்றங்களே.

தோல்வி கண்டு துவண்டு நின்றால்  தோன்றாது வாழ்வில் விடியல்கள்.

தொடர் தோல்விகளை தவிடு பொடியாக்கி தொலை  தூர நோக்கோடு சிந்தித்து  தொட்ட காரியத்தை தொடர்ந்து சென்றால் வெற்றி நிச்சயம்*

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா மக்களுக்கும் எம் கேரள வயநாடு மக்களுக்கு வாழ்வும் வாழ்வாதாரமும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும்  எம் தாய் அருள் நிறைந்த மரியே.


மரியே வாழ்க

 

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி