புனித அந்தோனியாரே | அருட்சகோதரி ஜோஸ்பின் பிரைடா SSAM | Veritas Tamil

புனித அந்தோனியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித அந்தோணியார்

இவர் ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் 1195ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பெர்தினாந்து ஆகும். குழந்தைப் பருவத்தில் படிப்பிலும்இ ஒழுக்கத்திலும் கூரிய நுண்ணறிவிலும் சிறந்து விளங்கினார். இறைபற்றும்இ ஞானமும் மிகுந்தவராகக் காணப்பட்டார். இறைபற்றும்இ ஞானமும் மிகுந்தவராகக் காணப்பட்டார்.  தினந்தோறும் தவறாமல் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கு கொண்டார். நீண்ட நேரம் இறைவனைப் போற்றுவதிலும், திருப்பாடல்களைப் பாடுவதிலும்இ செபிப்பதிலும் ஆர்வமாகச் செயல்பட்டார். திருப்பலியில் பீடசிறுவனாக பணிபுரிவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தர்.


அந்தோணியார் உலகை வெறுத்து ஒரு துறவியாக மாறத் தீர்மானித்தார். தூய அகுஸ்தினார் குருமடத்தில் சேர்ந்தார். தினந்தோறும் இறைவார்த்தையை வாசித்து, தியானித்துஇ வாழ்வாக்கி சான்று நல்கினார். இறைபாதத்தில் அமர்ந்து இறையன்பை நிறைவாகப்பெற்று சான்று பகிர்ந்தவர். கி.பி.1219ஆம் ஆண்டு குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். பிரான்சிஸ் அசிசியாரின் துறவிகள் மீது அன்பும் மதிப்பும் கொண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையில் 1220ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் சேர்ந்தார். பெர்தினாந்து என்னும் இயற்பெயருக்குப் பதிலாக அந்தோணியார் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. அசிசியாரின் தாழ்ச்சிஇ ஏழ்மைஇ ஆன்மதாகம்இ கீழ்ப்படிதல் போன்ற நற்பண்புகள் அந்தோணியாரை மிகவும் கவர்ந்தன.


அந்தோனியாரின் புதுமைகள் மற்றும் போதனைகள்
    ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம்
 
    பிரிதொருமுறை சிறப்பு திருப்பலிக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது ஆனால் அன்றைய தினம் மறையுரை ஆற்ற வேண்டிய குருவானவரால் வரமுடியாத சூழ்நிலை. அதிபர் தந்தை அந்தோனியாரிடம்  நீங்கள்தான் இன்று மறையுரை ஆற்ற வேண்டும் என சொல்லி விட்டு சென்று விட்டார். ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு மிக சிறப்பாக மறையுரை ஆற்றினார்.  அந்தோனியாரின் மறையுரையைக் கேட்ட அனைவரும் மலைத்து போயினர்;.   

    இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.

    ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில் ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு. 

    ஒருமுறை நற்கருணைமுன் முழந்தாள்படியிட்டு செபித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பாக  அலகை தோன்றி அவரைச் சோதிக்க முயன்றது. கலக்கம் ஏற்பட்டாலும் முழந்தாள்படியிட்டிருந்த சலவைக் கல்லில் பக்தியுடன் சிலுவை அடையாளம் வரைந்தார். அந்தச் சிலுவை அடையாளம் சலவைக் கல்லில் அப்படியே பதிந்துவிட்டது.இதைப் பார்த்ததும் அலகை அலறி அடித்துக்கொண்டு ஓடியது. அந்த சலவைக் கல் சிலுவை அடையாளத்துடன் இன்றும் காணப்படுகிறது. இவ்வாறு சிலுவையின் மகத்துவத்தைத் தமது  பன்னிரெண்டாம் வயதில் உணர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி வழியாகக் குருவானவராகப் பணியாற்ற விரும்பினார். 


    ஒருநாள் இரவு அந்தோணியார் தமது அறையில் வெகுநேரம் கண்விழித்து செபித்துக் கொண்டிருந்தார்.  விவிலியத்தைத் திறந்து வைத்திருந்தார். திடீரென பேரொளி அந்த அறையை நிரப்பியது. குழந்தை இயேசு விவிலியத்தின் மேல் நின்று அந்தோணியாரின் கழுத்தைக் கட்டித் தழுவினார். அந்தோணியார் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். விண்ணகம் இந்த மண்ணுலகில் உண்டானது போல் உணர்ந்தார். புனிதர் குழந்தை இயேசுவைத் தனது மார்போடு சேர்த்து அரவணைத்த அந்தோணியார் பேரானந்த நிலையில் மெய்மறந்து நின்றார். குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தும் பாக்கியம் பெற்றவர். இதை திர்சோ என்பவர் நேரில் கண்டு சான்று கூறினார்.
அந்தோணியார் தமது வாழ்நாள் முழுவதும் அன்பையும்இ ஏழ்மையையும் தாழ்ச்சியையும்இ ஞானத்தையும் அணிகலன்களாக அணிந்திருந்தார்.


அந்தோனியாரின் சிறப்புகள்:
நற்செய்தியின் இறைமனிதர்; உலகின் மாபெரும் புனிதர்; திருச்சபையின் மறைவல்லுநர்; காலத்தின் அறிகுறிகளைத் தெரிந்து திருமறையைப் பாதுகாத்த இறைவாக்கினர். நற்செய்தியைச் சொல்லாலும்; செயலாலும்; வாழ்வாலும் அறிவித்த இறைதூதர். ஏராளமான அற்புதங்கள் செய்தவர். திருச்சபையின் மாணிக்கமாய்த் திகழ்ந்தவரே புனித அந்தோணியார்.


இறுதியாக…
1231ஆம் ஆண்டு கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 32 ஆண்டுகளுக்குப்பின் (1263) அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவாவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.


பாதுகாவல்:

காணாமல் போன பொருட்களை கண்டடைய செய்பவர்
பேய்களை விரட்ட இவரது துணையை நாடுவர். 
ஏழைகள் மாலுமிகள் மற்றும் மீனவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாவலர் அஞ்சல்களின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.


ஏன் இவர் பதுவை புனிதர் என அழைக்கப்படுகிறார்?
இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார்.

இப்புனிதரின் பெருவிழா நாளிலே இவரின் பரிந்துரையை நாடுவோம். கோடி அற்புதர் இறைமகனிடமிருந்து நமக்கு தேவையான வரங்களை பெற்றுத் தர வேண்டுவோம். அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இறந்த அனைத்து ஆன்மாக்களும் இறைவனில் சங்கமிக்க அருள்கேட்போம்.  


அருட்சகோதரி ஜோஸ்பின் பிரைடா SSAM