“என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” (யோவான் 16:33)
இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்களுக்கு நன்கு அறிமுகமான திராட்சைச் செடி, கிளைகள் ஆகியவற்றை உருவங்களாகக் கொண்டு, அவருக்கும் தம் சீடர்களுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்கவேண்டும் என்று விவரிக்கின்றார்.