அன்பு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.12.2024
![](/sites/default/files/styles/max_width_770px/public/2024-12/dec_04_-sinthanai_0.jpg?itok=0AP31zfM)
இந்த கவிதைக்கு
சொல் தேவையில்லை
இதன் உணர்வுகளை
விழிகள் பேசும்
உலகத்தின் பொது மொழி
இது மட்டும் தான்
ஆசை அடங்குவது
இது ஒன்றுக்குத்தான்
உயிர்களோடு உறவாட
இதனால் தான் முடியும்
நீயும் நானும் நாமாக இணைய
இது வேண்டும்
வேற்றுமைகளை மறந்த
ஒற்றுமைக்கு இது தேவை
நம்பிக்கையே
இதன் வளர்ச்சி
கருணையே
இதன் முதலீடு
உண்மையே
இதன் பலம்
வெற்றியே
இதன் பரிசு
இதை கொடுத்து
எதையும் வாங்கலாம்
எதை கொடுத்தாலும்
இதை வாங்க முடியாது
இது கருவி
எதையும் உருவாக்கும்
இது ஆயுதம்
எதிரிகளையும் வெல்லும்
இதன் பாதையில்
மகிழ்ச்சி பயணிக்கும்
இதன் பயணத்தில்
வாழ்வு சிறக்கும்
அன்பு
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க வளர்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
![Livesteam thumbnail](/sites/default/files/inline-images/live-stream-thumb.jpg)