சொல்லாலும், செயலாலும் கடவுளை மாட்சிபடுத்துவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

3 ஜூன் 2025                                                                                                                  
பாஸ்கா 7-ம் வாரம் – செவ்வாய்
 தி.பணி 20: 17-27
யோவான் 17: 1-11a


சொல்லாலும், செயலாலும் கடவுளை மாட்சிபடுத்துவோம்!


முதல் வாசகம்.
இன்றைய நமது வாகங்கள் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளன, ஏனெனில் அவை விரைவில் தங்களை விட்டுப் பிரியப் போகும் இரு தலவர்கள் தங்கள்  சீடர்களுக்குக் கூறும்  இறுதி வார்த்தைகளக் கொண்டுள்ளன.  

முதல் வாசகத்தில், புனித பவுல் ஆசியா மைனரில்  உள்ள நம்பிக்கையாளர்களிடம் அவரது பிரியாவிடை குறித்து   அறிவிக்கிறார். அவர் தூய   ஆவியாரால்  வழிநடத்தப்பட்ட  நிலையில்,  எபேசு மற்றும் ஆசியா மைனரின் பிற பகுதிகளிலுள்ள மக்களுக்கு தனது ஊழியப் பணி முடிந்துவிட்டது என்பதை உணர்ந்து, அவர் அங்கிருந்து எருசலேமுக்குச் செல்வது குறித்தும், அங்கு அவருக்குக்  காத்திருக்கும் சிறைவாசம் மற்றும் துன்புறுத்தலுக்கும் அஞ்சவில்லை என்றும்  தெரிவித்து விடைபெறுகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில்,   17 ஆம் அதிகாரத்தில், இயேசு தனது கடைசி இராவுணவு  உரையை இவ்வாரத்தில் முடிக்கிறார். இப்பகுதியானது  இயேசு தம் தந்தையிடன்  சமர்ப்பிக்கும் இறைவேண்டலைக் கொண்டுள்ளது.

இதில் அவர் தந்தை தன்னிடம் ஒப்படைத்த பணிகளைச் செய்து முடித்து, அவரை மாட்சிப்படுத்தியதாகக் கூறுகின்றார். உலகை மீட்க வேண்டும் என்பதுதான் கடவுளின் திட்டம். அதனைச் செய்து முடித்து இயேசு கடவுளை மாட்சிப்படுத்தினார் என்று யோவான் குறப்பிடுகிறார.

சிந்தனைக்கு.

நற்செய்தியில்   இயேசுவின் இறுதி இறை வேண்டலைப் பற்றி நாம் வாசிக்கின்றோம். வழக்கம்போல், இயேசு கடவுளை  ‘தந்தையே! என்று அழைப்பதை யோவான் குறிப்பிடுகிறார்.  இயேசு நமக்குக் கற்பித்த இறைவேண்டலில்  இதே உறவுமுறையை நமக்குக் கற்பித்தார் (மத்6:9). இதனிமித்தம், இறைவனிடம் நாம்  வேண்டும்போது, தந்தை- பிள்ளகைள் என்ற உணர்வோடு இறைவேண்டல் செய்ய அழைக்கப்படுகிறோம். இத்தகைய உறவுமுறை வேறு எங்கிலும் குறிப்பாக புறவின சமயத்தாரிடையே வலியுறுத்தப்படாத உறவு முறையாகும். 

அடுத்து, அவரது மன்றாட்டில் தாழ்ச்சியைக் காண முடிகிறது. அவர், “தந்தையே! உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு, நீர் மகனை மாட்சிப்படுத்தும்” என்று தன்னை மாட்சிப்படுத்த இறைஞ்சுகிறார். இதற்கு முன்பாக, இயேசு தந்தையாம் கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணியை செம்மையாக முடித்த மகிழ்ச்சியில் தந்தையை மாட்சிபடுத்தினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
‘கடமையைச் செய், உரிமையைக் கேள்’ எனப்பதற்கு ஒப்ப, இயேசு தன்னில் நிறைவு கொள்கிறார். 
தொடர்ந்து, இந்த இறைவேண்டலில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவெனில்,   “அவர்களுக்காக நான் வேண்டுகிறேன், உலகிற்காக அல்ல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன்” என்கிறார்.  அவரது அழைப்பை ஏற்று, அவரை ஏற்றுக்கொண்டோரான நமக்காக மன்றாடுகிறார்.  இயேசுவே நமது இணைப்பாளர். தந்தையாம் கடவுளையும் அவரது பிள்ளைகளாம் நம்மையும் இணைக்கும் ஒரே இணைப்பாளர். இது நமக்கான கடவுளின் கொடை என்றால் மிகையாகாது. கல்வாரியில் உயிர்விடும் வேளையில் விண்ணையும் மண்ணையும் இணைப்பவராகவே சிலுவையில் தொங்கினார். 

இயேசுவின்  திருஅவைக்கான  இன்றைய  உன்னதமான இறைவேண்டலில் "மாட்சிபடுத்துதல்" என்பது முக்கிய வார்த்தையாகும். தந்தை நமக்கு ஆற்றிவரும் நன்மைகளுக்காக அவரை நாம் எப்பொழுதும் மாட்சிபடுத்த வேண்டும். ஆகவே, நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் ‘நான் என் வாழ்க்கையில்’ கடவுளை  எனது  சிந்தைனையாலும், சொல்லாலும், செயலாலும், வழிபாட்டாலும் மாட்சிபடுத்துகிறேனா? என்று சிந்த்தித்து செயல்படுவது இன்றியமையாதது. அவரது பெயர், ஆளுமை மற்றும் வல்லமை ஆகியவற்றைக் கொண்டாட வேண்டும். அவர் நமக்கு அளித்த ஆசீர்வாதங்களுக்காக நன்றி தெரிவிப்பதும் இதில் அடங்கும்.
 
இறைவேண்டல்.

தந்தையின் திருவுளத்தை முழுமையாக நிறைவேற்றிய ஆண்டவரே, இவ்வுலகிற்கு நன்மை தரும் செயல்களில் ஈடுபடுவதின் மூலம்  நான் கடவுளின் திருபெயரைத் தொடர்ந்து மாட்சிபடுத்த என்னை ஆசீர்வதியும். ஆமென். 

   

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452