வாரும் தூய ஆவியே

வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.

யோவான் 6-63.

உலகம் தோற்றத்தின் போது  ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடி கொண்டு இருந்தார் . அது முதல் ஆண்டவரின் ஆவி ஒவ்வொருவர் கூடவிருந்து பெரும் செயல்களை செய்தார். 

மோயிசன், யோசுவா , கிதியோன், சிம்சன்,  சவுல் ராஜா, தாவீது ராஜா, எலியா, எலிசா, ஏசாயா, எசேக்கியேல்,  திருத்தூதர்கள் என பலரோடு இருந்து வல்ல  பல செயல்களை செய்து நேரிய வழியில் நடத்தி வாழ வைத்தார். 

ஆண்டவரின் வார்த்தையை மீறி நடந்து   சவுல் ராஜா , சிம்சன்  போன்றோர் ஆண்டவரின் ஆவியை இழந்தனர்.  

நாம் ஆவியானவரின் துணையை நாடுவோம். அவர் நம்மை வாழ வைப்பார். வழி காட்டுவார். அறிவுரை கூறுவார். அறிவைத் தருவார். ஆண்டவரின் வார்த்தையை கேட்டு இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பாது அவர் காட்டும் வழியில் நடந்தால் நம்மோடு இருக்கும் ஆவியானவரும் நம்மோடு இருந்து நல்ல வாழ்வை நமக்கு தருவார்.

 

அன்பின் தூய ஆவியானரே எங்கள் மீது இறங்கி வாரும்.  உமது ஒளியில் எங்களை நடத்தும்.  எங்களை தூயவராக்கும்.  எங்கள் இல்லங்களில் உமது பிரசன்னத்தை தாரும். நோயிலிருந்து விடுதலை தாரும். எங்கள் பிள்ளைகள்  உம் வெளிச்சத்தில் நடக்க செய்யும்.  ஆமென்.