என் பங்கு

ஆண்டவரே என் பங்கு’ என்று என் மனம் சொல்கின்றது! எனவே, நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்

புலம்பல்3-24.

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்.

ஆண்டவர் கொடுக்கும் மீட்புக்காக நாம் அமைதியுடன் காத்திருக்க வேண்டும். 

நீதி வழியில் நடக்கும் சிலருக்கு துன்பங்கள் அதிகம் வருவதை பார்த்திருக்கிறோம்.  ஆண்டவரே அதை அவர்கள்மேல் வைத்தார்; எனவே, தனிமையில் அமைதியாய் நாம் அமர்வோம்.  

என் தலைவர் என்றுமே கைவிட மாட்டார். அவர் வருத்தினாலும், தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார் என்று அறிக்கையிடுவோம். .

ஆண்டவர் தன்னை அதிகமாக தேடுபவரை  வருத்துவதுமில்லை; துன்புறுத்துவதுமில்லை.

நம் வழிகளை ஆய்ந்தறிவோம். ஆண்டவரை வருத்தும்  வழி ஏதேனும்  நம் வாழ்வில் இருக்கிறதா என ஆராய்வோம்.  அதை விட்டு விலகுவோம். 

 

ஆண்டவரே  என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக! மாலைப் பலிபோல் என் கைகள் உம்மை நோக்கியுள்ளது.  என்னைக் காத்தருளும்; தீமை செய்வோரின் பார்வைக்கு விலக்கி என்னைப் பாதுகாத்தருளும். உம் திருமுன்னிலையில் நான் எப்பொழுதும் இருக்க பண்ணும். ஆமென்.