சீனாவில் ஏற்பட்ட கலாசாரப் புரட்சி, சீனாவையே தலைகீழாய் மாற்றியது. மா.சே.துங்கின் உண்மையான கம்யூனிசம் சீனாவில் உருவாக வேண்டும் என்பதே இப்புரட்சியின் நோக்கம். லட்சக்கணக்கான சீன மாணவர்கள் இப்புரட்சியில் பங்கு பெற்றனர். அவர்கள் தங்களை 'செம்படை வீரர்கள்' என அழைத்துக் கொண்டனர். இந்த வீரர்கள் 'மாவோ' என அழைக்கப் படும் மா.சே.துங்கின் படத்துடன் சென்றனர்.
சோவியத் ரஷ்யாவின் தலைமை அமைச்சராகவும். கம்யூனிச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, ரஷ்ய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்.
ரோமானிய பேரரசின் தலைமைப் பீடமாக விளங்கிய இத்தாலி கலை - கல்வி, இலக்கியம் - சிற்பம் ஓவியம் என உயர்நிலையில் இருந்த காலம் மாறி, வீழ்ச்சி அடைந்தபோது, எழுச்சிபெற இள இரத்தம் செலுத்திய மாஜினியைத் தொடர்ந்து நாம் அறியப்பட வேண்டியவர் கரிபால்டி.
மிகப்பழங்கால கிரேக்க கணித மேதை பித்தகோரஸ். இவரது காலம் கி.மு. 582-500. இவர் துருக்கிக்கு அப்பால் உள்ள சாமோஸ் என்ற தீவில் கி.மு. 582இல் ஓர் செல்வகுடியில் பிறந்தவர். இளமையிலேயே சிறந்த நுண்ணிய அறிவும், ஆர்வமும் பெற்று விளங்கினார். ஆரம்பகாலத்தில் இவரது கேள்விக்கு ஆசிரியர்களே விடை கூறமுடியாது இருந்தது.
துணிவுக்கும், வீரத்திற்கும் வரலாற்றில் ஒரு பெயர் தான் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte), ஜெனோவாவால் பிரான்ஸிற்கு விற்கப்பட்ட கார்ஸிகா என்னும் சிறிய தீவில் உள்ள ஐயாட்சோ என்ற சிறிய கிராமத்தில் 1769 ஆகஸ்ட் 17இல் நெப்போலியன் பிறந்தான்.
இத்தாலி நாட்டின், பண்டைய மிகச் சிறந்த சிற்பி ஆஞ்சலோ. இவருடைய முழுப்பெயர் மைக்கேல் ஆஞ்சலோ (Michel angelo). இவரது காலம் 1475-1564. இவர் மிகச்சிறந்த ஓவியர்.
மிகச் சிறந்த ஆங்கில நாடக ஆசிரியர் இவர். அதோடு மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞரும்கூட. இவர் எழுதிய நூல்கள் உலகப்புகழ் பெற்றவை. உலகின் பல மொழிகளில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
எந்த ஒரு கருத்துக்கும் ஒரு மறுப்பு உண்டு. காலத்தின் மாறுதலாய் அது ஏற்படுவதுண்டு. இந்து மதத்தில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு தீர்வாக புத்தமும் சமணமும் தோன்றியது.
பண்டைய உலகம் தந்த அறிவியல் வல்லுனர்களின் வரிசையில் நாம் மறவாது அறியப்பட வேண்டியவர் கலிலியோ. இவர் இத்தாலி தந்த அறிஞர். இத்தாலியில் சாய்ந்த கோபுரம் உள்ள பைசா நகரே இவர் பிறப்பிடம். இவரது காலம் 1564-1642.