'சுகாதாரப் பராமரிப்பில் Al பயன்பாட்டை உறுதி செய்யவேண்டும்'| Veritas Tamil
வத்திக்கானில் நடைபெற்றுவரும் உலகச் சுகாதார மாநாடில் "Al மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்" என்ற தலைப்பில் சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், மனிதகுலத்தின் இம்மாநாட்டின் மீது AI மற்றும் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது நாம் சிந்திக்கும் விதத்தைப் பெரிதும் பாதிக்கிறது என்றும், நம்மையும் மற்றவர்களையும் நாம் எப்படி உணர்கிறோம் என்பதை மாற்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தற்போது இயந்திரங்களுடன் இடைத்தரகர்கள் போலத் தொடர்பு கொள்கிறோம். இதனால் அவற்றின் நீட்டிப்பாக மாறிவிடுகிறோம்; அவ்வாறே, நம்மைச் சுற்றியுள்ள மக்களின் முகங்களை நாம் மறந்துவிடுவது மட்டுமல்லாமல், மனிதத்தை எவ்வாறு அங்கீகரிப்பது, போற்றுவது என்பதையும் மறந்துவிடுகிறோம்" என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைகளில் பல நன்மைகளைக் கொண்டு வந்திருப்பினும், உண்மையான முன்னேற்றம் என்பது தனிநபர்களும் பொது நிறுவனங்களும்
-திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தல்!
மனித மாண்பினையும் பொது நன்மையையும் நிலைநிறுத்துவதில் உள்ளது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறே AI மற்றும் பிற தொழில்நுட்பங்களைத் தீங்கிழைக்கும் வகையில் பயன்படுத்தும்போது மனிதகுலத்திற்குப் போழிய தரும் விளைவை அவை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அதே தொழில்நுட்பங்களை நேர்மையான முறைகளில் பயன்படுத்தும்போது அவை நன்மைபயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதைக் காண முடியும்; ஆகவே, சுகாதார நிபுணர்கள் தங்கள் துறையில் AI-ஐ பொறுப்புடன் பயன்படுத்தும்போது, மனித வாழ்க்கையின் பாதுகாவலர்களாகவும் பணியாளர்களாகவும் அவர்கள் இருக்க முடியும்." என்றும் திருத்தந்தை அறிவுறுத்தியுள்ளார்.
பயன்பாடு