என் வீடு – சிறு கூடு | அருட்சகோதரி பிரைடா SSAM | veritas Tamil

என் வீடு – சிறு கூடு
கடற்கரைக்கு அருகில் ஒரு சிறிய கிராமத்தில் அருண் தனது மனைவி மேகலாவும்இ இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து வசித்து வந்தார். வீடு சிறியது. ஆனால் அந்த வீடில் இருந்து சிரிப்பு மட்டும் முடிவில்லாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அருண் ஒரு கூலித்த்தொழிலாளி. மேகலா காலைமுதல் இரவு வரை வீட்டு வேலைஇ பிள்ளைகளின் படிப்புஇ சமையல் என்று ஓடிக்கொண்டிருப்பார்.
ஒரு நாள் நண்பன் ஒருவர் அருணிடம் கேட்டான் இந்த சிறிய வீடு மிகவும் கடினமாக இல்லையா? வங்கியில் கடன் வாங்கி ஒரு நல்ல பெரிய வீடு கட்டி சிறப்பாக வாழலாமே? என்று ஆலோசனை கொடுத்தார்.
அருண் மெதுவாக புன்னகைத்து சொன்னார்:
“எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பெரிய வீடு தேவையில்லை. பெரிய அரண்மனை கட்டி, தனித்தனியாக வாழ்வதை விட ஒரே அறையில் ஒற்றுமையாய் வாழ்வதே மகிழ்வானது. சிறு கூட்டில் வாழ்ந்தால் தான் அன்பு ஆழப்படும். எங்கள் மனசு பெரியது. என் குடும்பத்துக்கு அந்த வீடு போதும். பாசம் அதிகமா இருந்தால், இல்லை என்கின்ற குறை காணாமல் போய்விடும். இடம் குறைவா இருந்தாலும் மனம் நிரம்பி இருக்கும்."
அந்த நிமிடத்தில் நண்பன் சற்று உறைந்து நின்றார்.
அவன் பெரிய வீடு கட்டி தனிமையில் வாழ்ந்தான்.
அருண் சின்ன வீட்டில் பெருமிதத்துடன் வாழ்ந்தான்.
நம்மிலும் பலர் பெரிய வீடு. சிறந்த வேலை, பலரும் மதிக்கின்ற அளவிற்கு பெயர் புகழ், செல்வம் என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம். தவறல்ல. ஆனால் இருப்பதை அனுபவிக்காமல் இல்லாத ஒன்றை நினைத்து நிகழ்காலத்தின் மகிழ்வை, சந்தோஷங்களை அனுபவிக்காமலே ஓய்ந்து போகிறோம்.
வீடு என்பது சுவர்களால் கட்டப்படுவது அல்ல; அது அன்பால் நிறைவடைவது. அழகான வீடுகட்டி ஆட்களில்லாமல் இருப்பதை விட, சிறு வீட்டில் ஒரு கூட்டு கிளியாய் வாழ்வது சிறப்பே.
Daily Program
