ஆண்டவர் திரும்பி வருவார் என்பதுதான் இறைவார்த்தை நமக்குத் தரும் நம்பிக்கையாக இருக்கின்றது. அவரது வருகையானது வெறும் வருகையாக இராது. அது தீர்ப்பிடும் வருகை. அவரது முன்னால் நமது தீயச் செயல்கள் மட்டில் கூனி குறுகி நிற்காமல் இருக்க நம்மை நாம் சீர் செய்துகொள்ள வேண்டும்.
கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்
மீட்பு என்பது மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. மனமாற்றம் இல்லையேல் மீட்பு வெறும் பகல் கனவுதான். மனமாற்றத்திற்கு முயற்சி வேண்டும். சக்கேயுவின் முயற்சி அவருக்கு மீட்பதை தேடி தந்தது.
“நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி இறைஞ்சி மன்றாடுவோரின் இறைவேண்டலுக்குக் கடவுள் செவிசாய்க்க மாட்டார?
மெசியா என்று அறிக்கையிட்ட சீமோனிடம் விண்ணகத்தந்தையே இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் என்றதோடு, அவரது சீமோன் என்ற பெயரை பேதுரு (பாறை) என்றும் அந்தப் பாறையின் மேல் இயேசு தனது திருஅவையைக் கட்டுவார் என்றும் மொழிகின்றார்.
"பூமியில் செல்வங்களை சேமித்து வைக்காதீர்கள், ஏனெனில், அவை நமக்கு நிரந்தரமான செல்வங்கள் ஆகாது என்கிறார். அவை அழிவுக்கு உட்பட்டவை என்றும், பிறரால் திருடப்பட முடியும் என்கிறார்.