முளைத்துக்கொண்டே இரு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.05.2025

விமானம் கூட எதிராக வீசும் கடும் காற்றை எதிர்த்து எழும்பியே பறக்கும்.

அது போலவே நம் வாழ்க்கையில் உயர்வு பெற கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு போராடுவது நமக்கு அவசியம்.

அதாவது மலர்தான் உன் வெற்றி என்றால் முட்களைத்தடையாகக் கருதாதே.

முத்துதான் உன் வெற்றி என்றால்  ஆழியின் ஆழத்திற்கு அஞ்சாதே.

சிகரம்தான் உன் வெற்றி என்றால் சின்னப் பாறைகளுக்கு சலித்துக் கொள்ளாதே.

சிலைதான் உன் வெற்றி என்றால் கல்லை காயப்படுத்துகிறோம் எனக் கலங்காதே.

ஆகையால் கற்றுக் கொண்டே இருப்பவர்கள் தோற்றுப் போவதில்லை.

கற்பித்துக் கொண்டே இருப்பவர்கள் சோர்ந்து போவதில்லை.

விதையில் நல்லது எதுவென யார்க்கும் தெரியாது.

விளையும் போது நல்ல உரங்கள் தான் நல்ல விளைச்சலை தருகிறது.

அது போல் வளரும் போது
நல்ல பாடத்தை கற்றால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து ம் மக்களுக்கு உழைப்பும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்  கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க

 

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி