கைகளை உயர்த்தி

தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றுங்கள்.

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவாராக!

திருப்பாடல்கள்  134-2,3

ஆண்டவர் நமக்கு ஆசி வழங்கும் கடவுளாய் இருக்கிறார்.  அவர் வாசம் செய்யும் தூய இடத்தை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து கைகளை உயர்த்தி வேண்டும் போது, நம் கண்ணீர்  நிறைந்த விண்ணப்பத்தை கேட்டு நிச்சயமாக ஆண்டவர் பதில் தருவார்.  நம் விண்ணப்பங்களை  அவரிடம் சொல்லுவோம்.  அவர் நம்மை நேரிய வழியில் நடத்தி, நம் வேண்டுதலுக்கு பதில் கிடைக்க செய்வார். 

அவர் நம்மை நேசிக்கிற கடவுள்,  நம்மை  சீயோனிலிருந்து ஆசீர்வதிக்க ஆவலாயிருக்கிரார்.  

ஜெபிக்க முடியவில்லையா.  நமக்கு நேரம் கிடைத்தால் நற்கருணை முன் அமைதியாக  அமர்வோம்.  அவர் நம் மனதின்  எண்ணங்களை ஆராய்ந்து அறிகிற தந்தை.  நமக்கு உதவி செய்யும் நல்ல ஆயன்.  

 

ஆண்டவரே உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகிறேன். என் காலை புகழ்ச்சியும், மாலை ஜெபங்களும் உம்மிடத்தில் வருவதாக.  ஆண்டவரே உம் இரக்கத்தையும் ஆசீரையும் என்மீதும்  என் உறவுகள், நண்பர்கள் , எனக்கு தெரிந்தவர்கள் அனைவர் மீதும் பொழிந்தருளும்.  ஆமென்