அரணும் கோட்டையும்

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.

பிலிப்பியர் 4-13.

ஆம் சகோதரமே,  கடவுள் நம் பக்கத்தில் இருக்கும் போது நமக்கு எதிராக யார் எழும்ப முடியும் . அவரே நம் அரண் . அவரே நம் கோட்டை. அவர் துணை கொண்டு நம்மால் எதையும் செய்ய நமக்கு ஆற்றல் உண்டு.

வறுமையிலும் நம்மால் வாழ முடியும். வளமையிலும் நம்மால் வாழ முடியும் வயிறார உண்ணவும் பட்டினி கிடக்கவும் நம்மால் முடியும்.  சவால்களை எதிர் கொள்ள நம்மால் முடியும். நன்றாக படிக்க நம்மால் முடியும் . நல்ல வேலைக்கு செல்ல நம்மால் முடியும். நல்ல அமைதியான  வாழ்வு வாழ நம்மால் முடியும். ஆண்டவர் நம்மோடு இருக்கும் போது  முடியாது என்ற வார்த்தைக்கு  இடமே இல்லை. 

நம் பயணத்தில் சில தடைகள் வரலாம். ஆனால் ஆண்டவர் அவற்றை நமக்கு நன்மையாக முடிப்பார் . .நாம் சோர்வடையாது ஒவ்வொரு நாளும் அவர் பாதம் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் . அவருடைய வல்லமையும் ஆற்றலும் நம்மோடு இருந்து நம்மை முன்னேற்றத்திற்கு வழி நடத்தும். . அவர்  நம்மை விட்டு விலகுவதுமில்லை நம்மை கைவிடுவதுமில்லை

 

அன்பான ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் . நேசிக்கின்றோம். உமக்கு அன்பு செலுத்துகிறோம் .எங்கள் வாழ்நாளில்  தடைகளைத் தாண்டி  முன் செல்ல எங்களோடு இருந்து எங்களை வழிநடத்தும் . உமது வல்லமையால் எதையும் செய்யும் ஆற்றலை எங்களுக்குத் தாரும். ஆமென்.