மீட்பைத் தேடி

ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர்தரும் தூய ஆவியானார்.

1 கொரிந்தியர்- 15: 22,45

 

அன்பின் ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னியும். எங்கள் தேவைகளில் எங்களுக்கு உதவியாக வாரும். உன்னதமான உமது சிறகுகளின் கீழ், எங்களை மறைத்துக்கொள்ளும். அன்னை மரியே, நாங்கள் மீண்டும் பாவத்தில் விழாதபடி பாதுகாத்துக்கொள்ளும். இயேசுவுக்கே புகழ்.இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க. ஆமென்.