உன்னால் முடியும் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.08.2024

குப்பையில் விழுந்தாலும் முளைக்க வெட்கப்படுவதில்லை விதைகள்.

அது போலத்தான்

ஒருவரின் இருக்கும் இடம் அவரது திறமையைத் தீர்மானிப்பது இல்லை.

நம் வாழ்க்கை கடினமாக இருக்கும் பட்சத்தில், அதற்கேற்ப உங்களை மேலும் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.

என்னால் முடியாது" என்று முற்றுப்புள்ளி வைத்து விடாதே.
முடியாது என்பதே "கிடையாது" என்று துவங்கிக்கொள்ளுங்கள்.

அதாவது சிலந்தி போல எதிர்நீச்சல் போட்டால் தான வாழ்வில் வெற்றியடைய முடியும்.

எனக்கு இது வராது என்னால் முடியாது என்று நினைப்பவனால் எதையும் சாதிக்க முடியாது.

முயற்சி வேண்டும் வெற்றிக்கனியை எட்டும் வரை.

அலைகள் என்றும் ஓய்வதில்லை அது போல் நாமும் வெற்றியடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

உங்களால் முடியும் உங்களால் மட்டுமே முடியும் என்ற நினைப்போடு ஒரு முறையல்ல பலமுறை போராடுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் பொறுமையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி