கரிஸ்மாட்டிக் மறுமலர்ச்சி செயலாளர் கூட்டம் | Veritas Tamil


பெங்களூர், ஆகஸ்ட் 13, 2025 – இந்தியாவில் கத்தோலிக்க கரிஸ்மாட்டிக் மறுமலர்ச்சி என அழைக்கப்படும் தேசிய குழு, பெங்களூரில் உள்ள CCBI  செயலகத்தில் CCBI  இன் இணை துணைச் செயலாளர் அருட்தந்தை கிறிஸ்டோபர் விமல்ராஜ் மற்றும் பிற செயலாளர் அருட்தந்தையர்கள் சந்திப்பு கூட்டம்  நடைபெற்றது.

இந்தக் குழுவில், பாண்டிச்சேரி-கடலூரின் மறைமாவட்டத்தின் பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட் மற்றும் CCBI  இன் இந்தியாவின் ஆயர் ஆலோசகரும், வாழ்க்கை சார்பு ஊழியத்தின் பொறுப்பாளருமான; வத்திக்கானின் இந்தியா கத்தோலிக்க கரிஸ்மாட்டிக் மறுமலர்ச்சியின் சர்வதேச உறுப்பினர் செவ். சிரில் ஜான் மற்றும் பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த பிற தேசியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

டெல்லியில் உள்ள வின்சென்டே பால்  சபையின் மாகாண மற்றும் அனைத்து கரிஸ்மாடிக் தியான மையங்களுக்கான கத்தோலிக்க திருச்சபை கரிஸ்மாட்டிக் மறுமலர்ச்சி இயக்கத்தின் பிரதிநிதி செபத்துடன் கூடிய ஆசீரை  வழங்கினார். அருட்தந்தை கிரிஸ்டோபர், பல்வேறு CCBI ஆணையங்களின் பரப்பளவையும் சாதனைகளையும், மேலும் அவற்றின் தொடர்ச்சியான முயற்சிகளையும் எடுத்துக்காட்டினார். தொடர்ந்து, CHARIS இந்தியாவின் உறுப்பினர்கள் தங்களின் நாடு முழுவதும் நடைபெறும் பணிகள் குறித்து விரிவான தகவல்களை வழங்கி, ஆழமான ஒத்துழைப்புக்கான தங்களின் அர்ப்பணிப்பை மறுபடியும் உறுதிப்படுத்தினர். மேலும், CCBI திட்டங்களுக்கு இடைவிடாத ஜெப ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.

இந்த நிகழ்வை ஒரு மைல்கல் என்று வர்ணித்த பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட் "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு, ஏனெனில் அதன் அனைத்து உறுப்பினர்களையும் கொண்ட ஒரு தேசிய அமைப்பாக கத்தோலிக்க கரிஸ்மாட்டிக் மறுமலர்ச்சி என அழைக்கப்படும் தேசிய குழு, இந்த  செயலகத்திற்கு வருகை தருவது இதுவே முதல் முறை" என்று குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டம், தேசிய கத்தோலிக்க கரிஸ்மாட்டிக் மறுமலர்ச்சி  தலைமைக்கும் CCBI -க்கும் இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்தி, கூட்டுறவு உணர்வை வளர்த்தது.

Tamil Survey Popup Image