வேளாங்கண்ணியில் நடைபெற்ற மகளிர் ஆணைய தேசிய மாநாடு | Veritas Tamil

வேளாங்கண்ணியில் நடைபெற்ற மகளிர் ஆணைய தேசிய மாநாடு.
"நம்பிக்கையின் திருப்பயணிகள் " என்னும் கருப்பொருளில், 2025 மகளிர் ஜூபிலியின் 7வது தேசிய மாநாடு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரை, இந்தியா முழுவதிலிருந்தும் பெண்களை செபம் , தியானம் மற்றும் கொண்டாட்டத்திற்கு ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆலயத்தில், CCBI மகளிர் ஆணையம் ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில், நாடு முழுவதும் 77 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 1,400-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
"ஜூபிலி 2025 – இயேசுவின் பிறப்பில் நம்பிக்கையின் திருப்பயணிகள் " என்ற கருப்பொருளின் ஒளியில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, பெண்களுக்கு தங்கள் இல்லங்களிலிருந்து விலகி, செபம் செய்யவும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை கொண்டாடவும், அன்றாடக் குடும்பப் பொறுப்புகளிலிருந்து விடுதலை பெற்று உறவிணக்கத்தை அனுபவிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கியது. மறைமாவட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை நினைவுகூறும் நிகழ்வாக அமைந்தது.
மும்பை மறைமாவட்ட முன்னாள் பேராயர் கர்டினல் ஒஸ்வால்ட் கிராசியாஸ் துவக்க திருப்பலி நிறைவேற்றினார் . தேவாலயத்தின் வாழ்க்கை மற்றும் பணி முன்னேற்றத்தில் பெண்கள் ஆற்றும் மதிப்புமிக்க பங்குக்கு பாராட்டுகளை தெரிவித்தார். திறப்பு நிகழ்ச்சியில், ரூர்க்கேலா மறைமாவட்ட ஆயரும், CCBI மகளிர் ஆணையத் தலைவருமான ஆயர் கிஷோர் கே. குஜூர் மாநாட்டை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார். தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் சகயராஜ் தம்புராஜ் மற்றும் பல ஆயர்கள், அருட்தந்தையர்கள் ,
இறைமக்கள் பங்கேற்பு, நிகழ்வுக்கு சிறப்பை கூட்டியது.
ஆதிவாசி பெண்களின் பங்கேற்பை கருத்தில் கொண்டு, அமர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டன. ஆதார நிபுணர்கள் திருவிவிலியத்தில் உள்ள பெண்களின் நம்பிக்கை, வலிமை, தலைமைத்துவம் போன்ற அம்சங்களை விளக்கினர்.
நிகழ்ச்சிகளில் வேளாங்கண்ணியின் ஒலி–ஒளி நிகழ்ச்சி, மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறையை வெளிப்படுத்திய காணொளி, வத்திக்கான் துறையின் வாழ்த்துச் செய்தி, மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பாரம்பரிய நடனங்கள், ஜூபிலி ஆண்டுப் பாடல் ஆகியவை இடம்பெற்றன. "முகமற்ற முகம்(The Face of the Faceless )" திரைப்படம் மூலம் சகோதரி ராணி மரியாவின் வாழ்க்கையும், தியாகமும் ஒலி–ஒளி நாடகமாகக் காட்சியளிக்கப்பட்டது. மணிப்பூர் வன்முறையைப் பற்றிய சிந்தனை, 20 பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் புதிய திட்டம் அறிமுகமாக வழிவகுத்தது.
மறைமாவட்ட மகளிர் ஆணையங்கள் தங்கள் வெற்றிக்கதைகளை சுவரொட்டிகள் மூலம் படைப்பாற்றலுடன் பகிர்ந்து, பெண்களின் பணி வலுவடைய ஊக்கமளித்தன. மூன்றாம் நாளில், CCBI மகளிர் ஆணையத்தின் தேசிய கவுன்சில் மதிப்பீட்டு அமர்வுகளை வழிநடத்தி, மறைமாவட்ட ஆணையங்கள் தங்கள் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்து வளர்ச்சி தேவைப்படும் துறைகளை அடையாளம் காண உதவின.
மாநாடு, புனித ஜெபமாலை மற்றும் புனித பாதை மூலம் அனைவரையும் ஒன்றிணைத்தது. இது யாத்திரையின் ஆன்மாவையும் நம்பிக்கையின் உறுதியையும் வெளிப்படுத்தியது. இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்துவதற்கு துணைநின்ற வேளாங்கண்ணி ஆலயத்தின் முதல்வருக்கும், ஆசிரிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.பெண்களுக்கான சிறப்பான நிகழ்வாக அமைந்தது .
Daily Program
