jesus

  • உரத்த குரலில்

    Jun 08, 2020
    என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?

    திருப்பாடல்கள 42-2.
  • மீட்பின் கரம்

    Jun 07, 2020
    எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.

    கலாத்தியர் 2-20
  • அப்பா பிதாவே

    Jun 06, 2020
    "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார்.

    மாற்கு 14-36.
  • உறுதியாக இருக்க

    Jun 04, 2020
    அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.

    லூக்கா 6-48.
  • உம் பிள்ளை நான்

    Jun 03, 2020
    வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது - திருப்பாடல்கள் 19-1. ஆண்டவர் நம்மோடு பேசுகிறவர். அவர் இயற்கையின் மூலமாகவும் நம்மோடு பேசுகிறார். வானத்தைப் பார்க்கும்போது அது கடவுளுடைய மகிமையை சொல்லுகிறது. வானத்திலுள்ள மேகங்களையெல்லாம் அவருடைய கை வன்மையை காட்டுகிறது.
  • பிள்ளையாக வாழ

    Jun 03, 2020
    அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் - 1 கொரிந்தியர் 13-7. அன்பு சகலத்தையும் பொறுத்து கொள்ளும் என்றால், வேறு வழியின்றி பொறுத்து கொள்ளும் என்று அர்த்தம் இல்லை. துன்பங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அவற்றை தாங்கி கொள்ளும் என்பதுதான் இதற்கு அர்த்தமாகும்.
  • உடனிருப்பு

    Jun 02, 2020
    அவர் இறைப்பற்றுள்ளவர்; தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்; மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்; இடைவிடாது கடவுளிடம் மன்றாடிவந்தவர். திருத்தூதர் பணிகள் 10-2. செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர். அவர் இடைவிடாது ஜெபிப்பவர். அதோடு இரக்க செயல்களும் செய்பவர். நம் வாழ்வில் நாம் வேண்டலோடு நல்ல செயல்களும் செய்ய வேண்டும்.
  • வெளிப்படுத்துவார்

    May 30, 2020
    அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்” என்றார். லூக்கா 8-46. பன்னிரண்டு ஆண்டுகளாக பெரும்பாடுள்ள பெண் எப்படியாவது சுகத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி,மக்கள் கூட்டம் என்றும் பாராமல், முந்தியடித்துக்கொண்டு அவருடைய ஆடையின் ஓரத்தைத் தான் தொட்டாள். என்ன ஆச்சரியம்! .யேசுவின் ஆடையிருந்து ஒரு வல்லமை வெளிப்பட்டு அந்த பெண்ணை குணமாக்கியது.
  • காலம் இது

    May 30, 2020
    அவர்களிடம், “என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார் - லூக்கா 22-46.
  • சேர்த்து வைக்க

    May 28, 2020
    நீங்கள் அழிந்து போகாதபடி கைப்பற்றிய பொருள்களிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எதையாவது கவர்ந்தால், இஸ்ரயேலின் பாளையத்தையும் அழிவுக்குரியதாக்கிக் கலங்கச் செய்வீர்கள். யோசுவா 6-18. ஆண்டவர் நம்மை அழிவுக்கு எடுத்து செல்லும் பொருட்களை, அதாவது ஆண்டவருக்கு விருப்பமில்லாத செயல்கள் மூலமாக வந்த பணம் பொருள் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள் என கூறுகிறார்.
  • கேட்கும் பாக்கியமே

    May 28, 2020
    உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார். நீதிமொழிகள் 28-20. நாம் ஆசீர்வாதத்தை விரும்பினால் உண்மையுள்ளவர்களாய் வாழ வேண்டும். இன்று உலகம் உண்மையற்ற நிலைமையை நோக்கி ஓடுகிறது. எதற்கெடுத்தாலும் பொய். பொய் சொல்லி காரியத்தைச் சாதிக்க எண்ணுகிறார்கள்.கணவன் மனைவிக்குள் உண்மை இல்லை. பெற்றோர் பிள்ளைகளுக்குள் உண்மை இல்லை.
  • மகிழ்ச்சியானதே

    May 24, 2020
    மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு. 1 கொரிந்தியர் 15-43,44. நீதிமான் நம்பிக்கையோடுகூட உலகை விட்டு கடந்து போகிறார். அவருக்கு ஒரு மகிமையான விண்ணக வாழ்வு பற்றி எதிர்பார்ப்புண்டு.
  • ஆண்டவரோடு பேச

    May 24, 2020
    கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். திருப்பாடல்கள் 63.1-2.
  • விடியலில் உம்மை

    May 23, 2020
    இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் - 1 தெசலோனிக்கர் 5-17. நாம் வேண்டுகிற ஜெபம் கிடைக்க தாமதம் ஆகலாம். ஆனாலும் தொடர்ந்து இடைவிடாது ஜெபிக்க வேண்டும். சோர்ந்து போகாமல் ஆண்டவர்கிட்ட கேட்டால் நிச்சயமாக அது நமக்கு கிடைக்கும். இல்லையெனில் அவர் வேறு ஒன்றை அதை விட நல்லதாக தருவார்.
  • வாக்கின்படி இருந்தது

    May 22, 2020
    அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் ‘உண்ட பின்னும் மீதி இருக்கும்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார் - 2 அரசர்கள் 4-43. ஒரு சமயம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது இறைவாக்கினர் எலிசாவின் குழுவினருக்கு பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கொண்டு வந்தார். எலிசா, “மக்களுக்கு உண்ணக் கொடு” என்றார்.
  • இணைந்து இருப்போம்

    May 21, 2020
    முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார் - மத்தேயு 19-30. ஆண்டவர் நம்மை அழைத்துள்ளார். நிறைவாக ஆசீர்வத்திதுள்ளார். அதனால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நாம் இருக்க கூடாது. நாம் அழைத்த அழைப்பில் நிற்காமல் வழி தவறினால் நிச்சயமாக நாம் பின் தள்ளப்படுவோம். ஆண்டவர் முதலில் சவுல் அரசரை அரசராக்கினார். அபிசேகம் பண்ணினார். ஆனால் சவுல் ஆண்டவருடைய வார்த்தையை விட்டு வழி மாறுகிறார். எனவே ஆண்டவர் சவுலை விட்டு தாவீதை தேர்ந்தெடுக்கிறார்.
  • நம்மை அழைக்கிறார்

    May 19, 2020
    நீரும் உம்மோடுள்ள இந்த மக்களும் களைத்துப் போவீர்கள். இதை உம்மால் தாங்க முடியாது; தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்யவியலாது - விடுதலைப் பயணம் 18-18. இந்த உலகத்தில் குடும்ப பாரம், பிள்ளைகளைப் பற்றிய கவலை, கடன் என எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களால் நாம் சோர்ந்து போகிறோம். அவை நம் மன அமைதியை கெடுக்கிறது.
  • ஆசீரோடு வாழ

    May 18, 2020
    அப்பொழுது ஆடவர் “என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார் - தொடக்க நூல் 32-26. நம்மில் சிலர் ஆண்டவருடைய இரக்கத்தின் படி ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். சிலர் போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஆண்டவர் தாமாகவே வந்து மகிழ்ச்சியோடு தரும் ஆசீர்வாதங்களுமுண்டு. நாம் கேட்கும்போது கொடுப்பதற்கென்று அவர் தன்னிடம் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களுமுண்டு.
  • நன்றி சொல்ல

    May 17, 2020
    ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள் - யாக்கோபு 4:10. ஆண்டவருக்கு நாம் ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல வேஉறவுப்பாலம்/நன்றி-சொல்லண்டும். சமயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவருக்கென்று ஒரு சமயத்தை ஒதுக்க வேண்டும்.