முயற்சி அது முதற்படி | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.03.2024

சோம்பேறிகளுக்குத் தான் அனைத்து விடயமும் கடினமாகத் தோன்றும்.

முயற்சி உள்ளவனுக்கு அனைத்தும் இலகுவாகத் தான் கண்ணுக்குத் தெரியும்.

ஒரு பறவை ஒரு கிளையில் அமரும் போது அது நம்புவது அமர்ந்திருக்கும் கிளையை இல்லை. தனக்கு இருக்கும் சிறகுகளைத் தான்.

அது போல நீயும் உன்னை நம்பு. வாழ்க்கையில் தோல்வியும் ஒரு நாள் பயந்து ஓடி விடும்.

வெற்றி எனும் இலக்கை அடைவதற்கு யாரும் நமக்கான பாதையை உருவாக்க மாட்டார்கள்.
நாம் தான் அதற்கான பாதையை செதுக்க வேண்டும்.

நிலத்தில் தவறி விழுந்த விதையே முளைத்து மரமாகும் போது
தடுமாறி விழுந்த நம் வாழ்வு மட்டும் சிறப்பாக மாறாமல் போய் விடுமா.

விழும் போது தன்னம்பிக்கையுடன் எழ வேண்டும். உழைப்பையும் ஊக்கத்தையும் மட்டும் வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

உழைப்பு மற்றும் ஊக்கத்துடன் தன்னம்பிக்கை எனும் ஆயுதமும் இணைந்தால் மட்டும் தான் வெற்றிக்கு வித்திடும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் திறமையும் மகிழ்ச்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே

இன்றைய பொழுது இனிதாய் அமைய வாழ்த்துக்கள் 

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி