நவீன குடும்பங்களின் எதிரொலி | Veritas Tamil

நவீன குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
இன்று நாம் வாழும் கூழலில் நவீனக்குடும்பங்களே பரவிக் கிடக்கின்றன. தந்தை, தாய் மற்றும் பிள்ளை என்ற அமைப்பில் உருவாகி, ஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட அறை, நேரங்கள் மாறுபட்ட வேலை அமைப்பு முறைகள், மற்றும் தனியாக உணவருந்துதல் என நவீனம் மனிதத்தை மறந்து, இவ்வுலகில் நான் மடடுமே வாழ்கிறேன். எனக்கென்று யாரும் தேவையில்லை என்ற நிலைக்கு மாறிவருகிறது.
நவீன குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
இன்றைய உலகத்தில் குடும்பம் என்பது பழைய காலங்களை போல எளிமையானது அல்ல. தொழில்நுட்ப வளர்ச்சிஇ வேகமான வாழ்க்கை முறைஇ சமூக மாற்றங்கள் ஆகியவை குடும்ப அமைப்புகளை வெகுவாக பாதித்துள்ளன. இத்தகைய சூழலில் நவீன குடும்பங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன.
வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை சமநிலை
பலர் அதிக வேலைப்பளுவால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாமல் இருக்கிறார்கள். இது உறவுகளில் உரசலையும் தனிமையையும் உருவாக்குகிறது.
தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள்
கைபேசி, கணினிஇ சமூக ஊடகங்கள் ஆகியவை குடும்ப உறுப்பினர்களை ஒருவரிடமிருந்தும் விலகச் செய்கின்றன. நேரடி தொடர்புகள் குறைவதன் மூலம் உணர்வுப் பிணைப்பு பாதிக்கப்படுகிறது.
தலைமுறை இடைவெளி
பழைய தலைமுறையும் இளம் தலைமுறையும் உறவாடும் போது அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு, பழக்கவழக்க வித்தியாசம், புரிதல் குறைவு உருவாகும். இதையே தலைமுறை இடைவெளி எனக் குறிப்பிடுகிறோம்.
பொருளாதார அழுத்தங்கள்
விலை உயர்வு, பணியிழப்பு போன்ற பொருளாதார சிக்கல்கள் குடும்பத்தில் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
தனிமை மற்றும் உளவியல் பிரச்சனைகள்
சமூக உறவுகள் குறைவதாலும், ஒரே வீட்டிற்குள்ளும் தனிமை உணர்வை அனுபவிக்கிற குடும்ப உறுப்பினர்கள் அதிகரித்து வருகின்றனர். இது மனநல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
விவாகரத்து மற்றும் குடும்பக் கோளாறுகள்
தற்காலிக உறவுகள் அதிகரித்து வருவதால் விவாகரத்தும், குடும்பச் சிக்கல்களும் அதிகரிக்கின்றன. இதன் பாதிப்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கும் எதிரொலிக்கிறது.
நிறைவாக
இத்தகைய சவால்களை கடந்து செல்லஇ குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வது, திறந்த மனதுடன் உரையாடுவது, மற்றும் தரமான நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம். சகிப்புத் தன்மை, மரியாதை, அக்கறை போன்ற மதிப்பீடுகள் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும்.
Daily Program
