காட்டிய அன்பு

ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்! - திருப்பாடல்கள் 86:13. ஆண்டவருடைய பேரன்பு என்றென்றும்  உள்ளது. நம்முடைய ஆன்மாவை நரகத்தில் விழாதபடி காக்கிறார். நெருப்புக்கு நம்மை ஒப்புகொடுக்காமல் காக்கிறார். அதைத்தான் "நாம் பாவிகளாய் இருக்கும் போது, நமக்காக உயிரை கொடுத்து, தம்முடைய பிள்ளையாக மார்போடு அணைக்கிறாரே  என்று தாவீது சொல்லுகிறார். அது நம்மை பாது காக்கிற அன்பு.

மேற்கினின்று கிழக்கு எவ்வளவு தொலைவிலுள்ளதோ, அவ்வளவு தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். அது மன்னிக்கிற அன்பு. காணாமல் போன நம்மை தேடி வந்து காடு மேடு எல்லாம் அலைந்து நம்மை தோள்களில் சுமந்து செல்கின்ற கடவுள் அவர். அவருடைய அன்பு தேடுகிற அன்பு.

ஆண்டவர் தம்மில் அன்புகூர்ந்து, அவருடைய கட்டளைகளை பின்பற்றுகிற அனைவருக்கும் அவர் கொடுக்கிற அருள் மேலானது.  இயேசு வழியாக நாம் பெற்றுள்ள மீட்புக்காக அவருக்கு நன்றி சொல்வோம். கொடுக்கிற அன்பு.

ஜெபம்: ஆண்டவரே எங்களுடைய ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானாரே, உம்மை நன்றியோடு துதிக்கிறோம். உயிர்த்த இயேசுவே எங்களோடு வந்து தங்கும். எங்களுடைய இந்த நிலை மாறி உம்மில் ஒரு உயிர்ப்பை, எழுச்சியை, பூரண சமாதானத்தை நாங்கள் காண அருள் செய்யும். ஆமென்.