தேவைகள் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 14.10.2024

மலர்கின்ற மலரின் மணத்தை பொறுத்து தான் மதிப்பு. அழகிய 
மண மாலையா ஆண்டவனின் 
திருப்பாதமா என.

பேசுகின்ற வார்த்தைகளை பொறுத்து தான், உங்களின் மதிப்பும்
அதாவது யாரையும் உங்கள் தேவைக்காக பயன்படுத்தி விட்டு

தேவை முடிந்தவுடன் தூக்கி எறிந்து
விடாதீர்கள். ஏனெனில்,உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை.

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை.

மனதை இழக்காத வரையில்
நாம் எதையும் இழப்பதில்லை.

சிந்தித்து செயல்படுங்கள்
இதுவும் கடந்து போகும்.

அருவியாகச் சத்தமிடும் போது தான் தண்ணீரை வியந்து பார்க்கிறோம்

குளத்தில் அடங்கியுள்ள நீரின் மௌனம் ஒருபோதும் புரிந்து கொள்ள முயன்றதே இல்லை.

ஆகையால் கிடைத்ததை அனுபவிக்கக்கற்றுக் கொள்.

கிடைக்காததை ரசிக்கக் கற்றுக் கொண்டால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் நன்னெறியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி