பிலிப்பைன்ஸில் முதல் திருவருகை கால ஞாயிறன்று திருப்பலியில் குண்டுவெடிப்பு || வேரித்தாஸ் செய்திகள்

டிசம்பர் 3, 2023 அன்று, பிலிப்பைன்ஸில் உள்ள மராவியில் உள்ள மின்டானாவோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற   திருப்பலியில்  ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தின் காட்சியை சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை செய்யும் போது  நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 42 பேர் காயமடைந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

 கடந்த ஞாயிறு அன்று.திருவழிபாட்டு காலத்தின்   புதிய வழிபாட்டு தொடக்கத்தைக் குறிக்கவும், திருவருகை காலத்தின்  முதல் ஞாயிற்றுக்கிழமைக்கான மெழுகுவர்த்தியை ஏற்றி திருப்பலி நிறைவேற்ற ஒன்றுகூடிய  கத்தோலிக்கர்கள் குழு ஒன்று குண்டுவெடிப்பில் மறைசாட்சிகளாக மாறியுள்ளனர் என்று கலூகன் ஆயரும்  CBCP இன் தலைவருமான பாப்லோ விர்ஜிலியோ டேவிட்  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"குண்டு வெடிப்புக்கு காரணமான நபர்கள் கத்தோலிக்கர்கள் கொண்டாடும் இந்த நாளினை   தேர்ந்தெடுத்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். திருப்பலியில் கலந்து கொண்டு ஜெபித்துக்கொண்டு இருந்த கத்தோலிக்கர்கள் நான்கு  பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மராவி நகரத்தில் உள்ள மிண்டனாவோ மாநில பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி கூடத்தில் பத்து பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என்று தெரிவித்தார். 

உலகெங்கிலும் உள்ள துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களில் இன்று இவர்களும் அவர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டு  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 29 ஆம் தேதி அன்று  நினைவுகூரப்படும் மறைசாட்சிகளின் நினைவு அன்று இவர்களும் கணக்கிலிடப்பட்டு விண்ணகத்தில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.  

கிறிஸ்துவின் பாடுகளில்  அவர்கள் பங்குகொண்டதை நினைத்து நாங்கள் ஆறுதல் அடைகிறோம், அவர்களுடைய இரத்தம் கிறிஸ்துவின் இரத்தத்தைப் போல நற்செய்தி பணிக்காக சிந்தப்பட்டது  என்று ஆயர் டேவிட் கூறினார்.
இறந்துபோன கத்தோலிக்க இறைமக்கள்  கலந்துகொண்ட அந்த கடைசி திருப்பலியில் , குறிப்பாக 'துறவிகளின் ஒற்றுமை, பாவ மன்னிப்பு, உடலின் உயிர்த்தெழுதல் மற்றும் முடிவில்லா வாழ்வு ' ஆகியவற்றில் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். .

நிச்சயமாக, இதுபோன்ற கொடூரமான வன்முறைச் செயலைத் தூண்டிய கொலையாளிகள் தங்கள் அன்புக்குரியவர்களையும் நினைவில் கொண்டு  வாழ வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் அவர்களது சொந்தக் குடும்பங்களைப் போல பார்க்க  வேண்டும்.  இத்தகைய வன்முறைகளை கண்டு கண்டனம் செய்வது மட்டும் போதாது மாறாக  அமைதியை விரும்பும் ஒவ்வொரு பிலிப்பைன்ஸ்  மக்களும் பரிகாரம் தேடுவதற்கான ஒரு வழியாக இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் கைவிடப்பட வேண்டும், ஆயர் என்று டேவிட் கூறினார்.

இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும் , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நாம் அனைவரும் இணைந்து  பிரார்த்தனை செய்வோம் . மேலும் நாம் நமது குடும்பங்களுடன் ஆவிக்குரிய வகையில் ஒன்றிணைந்து, "எல்லாவற்றையும் தமக்குத் தாமே மீட்டெடுத்து, தம் சிலுவையின் இரத்தத்தால் சமாதானம் செய்துகொள்வார்..." (கொலோ. 1:20) என்று கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து பலத்தையும் ஆறுதலையும் பெறுகிறோம்" என்று ஆயர் அவர்கள் கூறினார்.

சமூக தொடர்புகளுக்கான CBCP ஆயர் ஆணையத்தின் தலைவர் ஆயர்  மார்சிலினோ அன்டோனியோ மராலிட், ஞாயிற்றுக்கிழமை, மாண்டௌ நகரில் உள்ள திரு இருதய பள்ளி வளாகத்தில் நடைபெற்ற  12 வது கத்தோலிக்க சமூக ஊடக உச்சி மாநாட்டில் பேசுகையில், திருப்பலியில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து, ஒரு கணம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், திங்களன்று MSU இல் வகுப்புகள் கடுமையான பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கப்பட்டன. 


https://www.rvasia.org/asian-news/cbcp-reminds-faithful-take-comfort-passion-christ-marawi-bombing-incident