உலக சிவில் (உள்நாட்டு) பாதுகாப்பு தினம்

உலக சிவில் (உள்நாட்டு) பாதுகாப்பு தினம்
        

சிவில் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதும், பேரழிவுகளுக்கு எதிராகப் போராடுவதற்குப் பொறுப்பான அனைத்துச் சேவைகளின் முயற்சிகள், தியாகங்கள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.
        

1931 ஆம் ஆண்டில்; பாரிசில் 'ஜெனீவா மண்டலங்களின் சங்கம்" நிறுவப்பட்டது. இவை பாதுகாப்பு மண்டலங்கள் என்று அழைக்கப்பட்டன. இது சிவில் முறைகளில் பொதுமக்கள் (பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், குழந்தைகள்) ஒரு பாதுகாப்பான புகலிடத்தைக் காணக்கூடிய ஒரு தனி நகரம் அல்லது பிரதேசமாக அமைந்தது. பல்வேறு நாடுகளில் நன்கு வரையறுக்கப்பட்ட பாதுகாப்பான பகுதிகளை உருவாக்குவதே அத்தகைய மண்டலங்களை உருவாக்குவதன் நோக்கமாக இருந்தது.
        

1958 இல் இந்த கட்டமைப்பானது சர்வதேச சிவில் பாதுகாப்பு அமைப்பு (ஐஊனுழு) இல் மறுசீரமைக்கப்பட்டு, ஒரு புதிய நிலைப்பாட்டைப் பெற்று, அரசாங்களுக்கிடையே ஒரு அமைப்பாக நடைமுறைக்கு வந்தது. 1972 ஆம் ஆண்டில், ஐஊனுழு ஒரு அரசுகளுக்கெதிரான அமைப்பாக மாறியது. 1974 ஆம் ஆண்டில், மக்கட்தொகைக்குள்ளே மக்களை பாதுகாப்பதற்கும், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளை சமாதான காலத்தில் தீர்த்து வைப்பதற்கும் அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.
        

தற்போது ஐஊனுழு இல் 53 நாடுகள் உள்ளன. 1990 இல் ஐஊனுழு நிறுவப்பட்டது. அது நிறுவப்பட்டு அவற்றின் சாசனம் மார்ச் 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதையே உலக சிவில் பாதுகாப்பு தினமாக அனைத்து நாடுகளிலுமுள்ள ஐஊனுழு உறுப்பினர்கள் கொண்டாடுகிறார்கள்.