சவால்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.10.2024

சவால் என்ற வார்த்தைக்குள்ளே தான் வாசல் என்ற வார்த்தையும் மறைந்திருக்கிறது.

ஆக நீ எதிர்கொள்ளும் சவால்களில் தான் திறக்கின்றன உன் எதிர்காலத்திற்கான வாசல்கள்.

ஆகையால் நீங்கள் கற்றுக் கொண்டேயிருங்கள்.

வீழ்ச்சியின் மீது பற்றுக் கொண்டவனாய். வெற்றியின் மீது பற்று அற்றவனாய்.

ஓருநாள் உன்னை வெற்றி அணைக்கச் சொல்லி அடம் பிடிக்கும்.

வெற்றியின் ரகசியம் எப்பொழுதும் உங்களுக்குள் தான் உள்ளது.

வீணாக வெளியில் தேடி 
அலையாதீர்கள்.

எல்லோருக்கும் எல்லாம் தெரியாது
ஆனால் எல்லோருக்கும் ஏதாவது ஒன்று கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

தெரிந்ததை வைத்து வாழ்க்கையில் சாதிக்கலாம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நன்னெறியும் நற்பண்புகளும்  கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க


சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி