அவமானங்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.08.2024

நீ எங்கே அசிங்கப்படுகிறாயோ
அந்த இடம் தான் வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுக் கொள்ள சிறந்த இடம் அதனால் அமைதியாக இருந்து கற்றுக் கொள்.

உங்கள் பிரச்சனை மற்றும் சவால்கள் எதுவாக இருந்தாலும் சரி சற்று விலக்கி வை, ஓய்வெடு, நிதானமாக யோசி,பின் செயல்படு எல்லாம் சுலபமாக முடியும்.

பொறுமை ஒன்றே உன்னை வெற்றிக்கான நல்நிலைக்குக் கொண்டு செல்லும்.

நீங்கள் ஒவ்வொரு தடவையும் தோற்கும் போது நாம் இன்னும் பெரிய செயல்களில் வெற்றி பெறப் போகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

முன்னாடி தோல்வி அடைந்துட்டோம்னு தரையைப் பார்த்தலும், பின்னாடி வெற்றி பெற்று விட்டோம்னு வானத்தைப் பார்த்தலும்
வாழ்க்கைக்கு சிறந்ததல்ல.

கர்வம் அற்ற வெற்றியே மேன்மேலும் சிகரம் தொட வழி வகுக்கும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் குறிப்பாக கிறித்தவ மக்களுக்கு நல்லோழுக்கமும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் நிறைவாய் கிடைக்க அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி