நீங்கள் அனைவரும் கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றவர்கள் - திருத்தந்தை லியோ XIV | Veritas Tamil

நீங்கள் அனைவரும் கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றவர்கள் - திருத்தந்தை
வத்திகானில் பணியாற்றும் அனைத்து அருட்தந்தையர்களிடம் திருத்தந்தை லியோ XIV நீங்கள் அனைவரும் கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றவர்கள் எனக் கூறினார்.
12 ஜூன் 2025 வத்திக்கானில் உள்ள உரோம் நகரில் பணியாற்றும் அனைத்து அருட்தந்தையர்களை வரவேற்ற திருதந்தை லியோ XIV அவர்களின் நம்பிக்கை மற்றும் சேவைக்காக அவர்களைப் பாராட்டினார். திருச்சபையை நேசிக்கவும் முன்மாதிரியாக இருக்கவும் அவர்களை வலியுறுத்தினார்.
"இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இறையாட்சிக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காகவும், உங்கள் அன்றாட உழைப்பிற்காகவும், பணிவாழ்வில் இவ்வளவு தாராள மனப்பான்மைக்காகவும், நீங்கள் அமைதியாக வாழ்வதற்கும், சில நேரஙங்களில் துன்பம் அல்லது தவறான புரிதலுடன் இருப்பதற்கும் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."
12.06.2025 அன்று காலை வத்திக்கானில் உரோம் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து திருத்தொண்டர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கும் பலத்த கைதட்டலைக் கேட்க விரும்புகிறேன்!" என்று கூறினார்.
கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றது.
அவர்கள் அனைவரையும் பாசத்துடனும் நட்புடனும் வரவேற்பதாகவும், அவர்களை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ளவும் ஒன்றாக நடக்கத் தொடங்கவும் இந்த சந்திப்பை விரும்புவதாகவும் திருத்தந்தை வலியுறுத்தினார்
அவர்கள் வெவ்வேறு சேவைகளைச் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து, "நீங்கள் அனைவரும் கடவுளின் பார்வையிலும் அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதிலும் விலைமதிப்பற்றவர்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.
நமது ஆன்மீக வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும்.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல அருட்தந்தையர்கள் வருவதால், அவர்களின் மறைமாவட்டம் "உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது" என்று திருத்தந்தை நினைவு கூர்ந்தார். எனவே இந்த உலகளாவிய தன்மை காரணமாக அவர் மூன்று விஷயங்களைப் பற்றி விவாதிக்க விரும்பினார்.
முதலாவது அவரது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றும், அது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என்றும் அவர் கூறினார்.
அருட்பணியாளர்கள் இறைமகன் இயேசுவோடு மட்டுமே ஒன்றித்திருந்தால் மட்டுமே நிறபலனைத் தந்து உலகிற்கு நம்பகமான சாட்சியை அளிக்க முடியும் என்றும் திருத்தந்தை லியோ வலியுறுத்தினார். அருட்பணியாளர்கள் ஒற்றுமையை வளர்க்கும் மனிதராக இருக்க வேண்டும். நாம் வாழும இந்த கலாச்சாரச் சூழல் ஒருவரை தனிமைப்படுத்துல் அல்லது சுய குறிப்பிற்கு அழைத்துச் செல்லும். எனவே நமது ஒற்றுமையை இக்கலாச்சார சூழலிருந்து பிரித்துவிடாது பாதுகாக்க வேண்டும்.
"ஒவ்வொருவரும் தங்கள் பணியில் அமைதியை மீண்டும் பெற உங்களுடன் பயணித்து உதவிட நான் விரும்புகிறேன்; ஆனால் துல்லியமாக இதற்காக, ஒரு உறுதியான ஆன்மீக வாழ்க்கையில் வேரூன்றிய, இறைவனுடனான சந்திப்பிலும், அவருடைய வார்த்தையைக் கேட்பதிலும், அருட்பணியாளர்கள் சகோதரத்துவத்தில் ஒரு புதுப்பிக்கப்பட்ட முயற்சியை நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் உறுதியளித்தார்.
நமது மாவட்டத்தில் ஒற்றுமை என்பது அர்ப்பணிப்பாக மாற வேண்டும். ஒன்றாக நடப்பது "எப்பொழுதும் நற்செய்திக்கு உண்மையுள்ளவர் என்பதற்கு ஒரு உத்தரவாதம்" என்று கூறினார்
இராண்டவதாக முன்மாதிரியாக இருப்பது.
"நான் எப்படி வாழ்ந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்" வெளிப்படையான வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்பதை புனித பவுல் எபேசின் மூப்பர்களிடம் கூறிய வார்த்தைகளை மே 31 அன்று குருத்துவ அருட்பொழிவின் போது கூறியதை அடிக்கோடிட்டு காட்டி நினைவு படுத்தினார்.
இதனால் "ஒரு தந்தை என்ற முறையிலும் மற்றும் ஒர் அருட்பணியாளன் என்ற முறையிலும் என் உள்ளார்ந்த மனதோடு கேட்பது, நாம் அனைவரும் நம்பகமான மற்றும் முன்மாதிரியான அருட்பணியாளர்களாக இருப்போம் என உறுதியளிப்போம்!" என்று திருத்தந்தை லியோ XIV வலியுறுத்தினார்.
சவால்களைக் கண்டு ஓடாமல் இருப்போம்.
மூன்றாவதாக காலத்தின் சவால்களை ஓர் இறைவாக்கினருக்கான திறவுகோலாக பார்க்க வேண்டும்.
"உலகில் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு கவலையும் வேதனையும் அடைகிறோம்" என்று அவர் உணர்த்தினார்: மரணத்தை உருவாக்கும் வன்முறை நம்மை காயப்படுத்துகிறது சமத்துவமின்மை நம்மை சவால் செய்கிறது. வறுமையைப் போலவே பல வகையான சமூக ஓரங்கட்டல் இப்போது யாரையும் விட்டுவைக்காத பரவலான துன்பம். இவை "வேறு இடங்களில் மட்டும் நடக்கவில்லை நமது உரோம் நகரிலும் நடைபெறுகிறது. சவால்கள் நிறைந்த இந்த நேரத்தில்தான் "நாம் அவர்களிடமிருந்து ஓடக்கூடாது" இறைவார்ததை வழியாக சாட்சியம் நிறைந்த வாழ்விற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
உங்களுடன் நடக்க என் விருப்பம்
நற்செய்தியையும் வரலாற்றையும் இணைத்து பயணித்த புனிதமான குருக்களின் முன்மாதிகையை பின்பற்றி நமது நகரத்தில் புனிதத்தின் விதைகளை தொடர்ந்து விதைக்க இந்த உதாரணங்களிலிருந்து நாம் பலத்தைப் பெறுவோம்" என்று ஊக்குவித்தார்.
அன்புள்ளவர்களே! "எனது நெருக்கம் என் பாசம் மற்றும் உங்களுடன் நடக்க எனது விருப்பம் குறித்து நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்." இந்த உணர்வோடு புனித அகஸ்டினின் பின்வரும் வேண்டுகோளுடன் அருட்பணியாளர்களுக்கான செபத்தை நிறைவுச் செய்தார்.
"நமது திருஅவையை நேசியுங்கள், நமது திருஅவையில் நிலைத்திருங்கள், நமது திருஅவையாக இருங்கள்.
யாரையும் ஏமாற்றாத யாரும் அழிந்துபோக விரும்பாத அழகான மணமகனான நல்ல மேய்ப்பனை நேசியுங்கள். சிதறடிக்கப்பட்ட ஆடுகளுக்காகவும் ஜெபிக்கவும்: அவர்களும் வளரட்டும் அவர்களும் அடையாளம் காட்டட்டும், அவர்களும் நேசிக்கட்டும் இதனால் ஒரே மந்தை மற்றும் ஒரே மேய்ப்பர் இருக்கட்டும்."
Daily Program
