மாற்றுரு பெறுவோம்

நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார் - லூக்கா 17:34. இந்த பகுதி முழுவதும் இயேசுவின் இரண்டாவது வருகையை பற்றியது. இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.

அவருடைய வருகையின்போது, கடவுளோடு உறவாடி, மகிழ்ந்து கொண்டிருக்கிறவர்கள், எந்த வேலையிலிருந்தாலும், எடுத்துக் கொள்ளப்பட்டு ஆண்டவரோடு இருப்பார்கள். ஆண்டவரோடு இல்லாதவர்கள் கைவிடப் படுவார்கள். அவருடைய இரண்டாவது வருகை பிரித்தலின் நாளாய் அமையும். தொடக்கத்தில் கடவுள் வெளிச்சத்தையும் இருளையும், வானத்துக்குகீழ் உள்ள நீரையும், வானத்துக்கு மேலுள்ள நீரையும் வெவ்வேறாகப் பிரித்தது போல, நல்ல கள்ளனை கெட்ட கள்ளனிடமிருந்து  பிரித்து தன்னோடு எடுத்து கொண்டது போல  தூயவர்களையும் பாவிகளிடத்திலிருந்து பிரிப்பார்.  

எனவே அவருடைய வருகையை எண்ணி, நாம் எப்போதும் பாவ மாசில்லாதவர்களாக இருக்க வேண்டும். ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது  இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; நாமும் மாற்றுரு பெறுவோம். எனவே எச்சரிக்கையாய் இருப்போம். அந்த நேரமும் நாளும்  தந்தை கடவுளை தவிர யாருக்கும் தெரியாது. 

ஜெபம்: ஆண்டவரே உமது வருகைக்கு தயாராக எங்களை மாற்றும். எங்கள் மீது தூய ஆவியை ஊற்றும். எபொழுதும் உம்மை எதிர்கொள்ளும் பிள்ளைகளாக விண்ணக வாழ்வை நோக்கி எங்கள் பயணம் அமைய அருள் தாரும். அன்னை மரியே எங்களுக்கு வழி காட்டும். ஆமென். #veritastamil #rvatamil #companionpriest