அவர் பெயரில்

இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது

திருத்தூதர் பணிகள் 3-16.

சாலமோன் மண்டபம் என்னும் இடத்தில் பேதுரு ஒருவரை நலப்படுத்துகிறார். 

முழுமையான உடல் நலம் என்பது அந்த நோயின் அறிகுறியே இல்லாமல் போனது என்பதாகும்.  ஆண்டவருடைய பெயரை   பேதுரு பயன்படுத்திய போது , பிறவி ஊனமுற்றவர்  சுகத்தைப் பெற்றுக்கொண்டார். எந்த குறைவுமில்லாத நிறைவான சுகம். 

அது சொந்த  வல்லமையால் நடந்தது அல்ல. ஆண்டவருடைய பெயரால் நடந்தது.  ஏசுவால் மட்டுமே முழுமையான  நலம் அருள முடியும்.

அவர் பெயரில் நம்பிக்கை வைப்போம். 

நம்மிடத்தில் இருக்கும் ஆண்டவர் பெரியவர்.அவரை அறிகிற அறிவேயல்லாமல் வேறே உலக அறிவோ, வைத்திய ஞானமோ பெரிய படிப்போ நமக்கு பூரண நலத்தை தராது  ஆண்டவர் மட்டுமே தருவார். 

இன்றைய நாட்களில் மக்களை அதிக அளவில் தாக்கி கொண்டிருக்கும் எய்ட்ஸ்‘,  கேன்சர்.  போன்ற நோய்களுக்கு மருந்து சாப்பிட்டாலும் அது முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்றால் அது கடவுளால் மட்டுமே முடியும். 

விசுவாச அறிக்கை இடுவோம். ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம் . சந்தேகமின்றி அவரை பற்றி கொள்வோம்.  

உம்முடைய பெயரினால்  என்னை சுகமாக்கும்" என்று சொல்வோம். அவர் பெயரை நம்பிக்கையோடு சொல்லி  நோயாளிகளுக்கான ஜெபிப்போம்.  ஆண்டவர் தானே முழு நலம் தருவார்.

 

ஆண்டவரே, அனைத்து நோயாளிகளையும் உம் பாதம் வைக்கிறோம்.  உம் பெயரால் அவர்களுக்கு முழுமையான நலம் அருளும்.  அவர்கள் தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற துணை செய்யும். புது பலம் பெற்று மகிழ்வாக வாழ செய்யும். உமது அதிசயங்களை கண்டு நிறைவான சாமாதானத்தோடு உம்மை புகழ்ந்து பாட அருள் புரியும்.  ஆமென்.