திருத்தந்தை பணிக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே தான் அமைதியை வலியுறுத்தி வருவதாகக் கூறி "உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" என்ற தனது செய்தியையும் மீண்டும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சும்கராங் (Tanjungkarang) மறைமாவட்டத்தின் முன்னெடுப்பில், இந்தோனேசியத் திருஅவை தலைவர்கள், பொதுநிலையினர் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து ஏப்ரல் 25, 2026 அன்று தெற்கு லம்பாங் கடற்கரையோரத்தில் 5,000 சதுப்புநிலக் கன்றுகளை நட்டனர்.