கத்தோலிக்க சமூகங்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளில் இணைந்து செயல்படவும் இது உதவும்.
காயீன் மற்றும் ஆபேலின் விவிலியக் கதையை நினைவு கூர்ந்த அருட்தந்தை ஆசி, பொறாமையும் பிரிவினையும் குடும்பங்களையும் சமூகங்களையும் அழித்துவிடும் என்றார். அமைதிக்கு மன்னிப்பு, ஏற்றுக்கொள்ளுதல், ஒற்றுமை மற்றும் பிறரின் நலனுக்கான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது என்று அவர் கூறினார். புனித பிரான்சிஸின் அமைதி செபத்தை அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றவும் அவர் யாத்ரீகர்களை ஊக்குவித்தார்.