“படைப்புடன் அமைதி” |Veritas Tamil

காரிட்டாஸ் சாட்டோகராம் வட்டத்தில்  “படைப்புடன் அமைதி” விழா.


செப்டம்பர் 14ஆம் தேதி, காரிட்டாஸ் சாட்டோகராம் வட்டார அலுவலகம் “ படைப்பின் பருவம்” (Season of Creation ) விழாவை வட்டார மாநாட்டு மன்றத்தில் செபத்துடன் துவங்கி அர்த்தமுள்ள முறையில் கொண்டாடியது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அவசியத்தையும், இயற்கையுடன் அமைதியாக வாழும் தேவையையும் இந்த நிகழ்வு வலியுறுத்தியது.

காரிட்டாஸ் சாட்டோகராம் வட்டாரம் என்பது தென்கிழக்கு வங்கதேசத்தில் உள்ள சாட்டோகராம் பகுதியில் செயல்படும் காரிட்டாஸ் வங்கதேசத்தின் வட்டார அலுவலகமாகும்.

இந்த ஆண்டின் தலைப்பு “படைப்புடன் அமைதி - இயற்கையுடன் அமைதி” என்பதைக் கொண்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, ஒற்றுமை மற்றும் உலகத்தை பாதுகாக்கும் பொது பொறுப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டது.

நிகழ்வை காரிட்டாஸ் சாட்டோகராம் வட்டார  இயக்குநர் திரு மார்சல் ரடான் குடா தலைமைதாங்கினார். மத ஒற்றுமையின் அழகான வெளிப்பாடாக, நான்கு பணியாளர்கள்—இஸ்லாம், இந்து, புத்தம் மற்றும் கிறிஸ்தவம் என நான்கு  மதங்களின்  பிரதிநிதிகளுடன்  — குர்ஆன், பகவத் கீதை,  திரிபிடகா மற்றும் விவிலியத்திலிருந்து மேற்கோள்கள் வாசித்தனர். இவை அனைத்தும் இயற்கையை பாதுகாக்கும் பொது அழைப்பையும், அமைதியை வளர்க்கும் தேவையையும் பிரதிபலித்தன.

பின்னர், பங்கேற்பாளர்கள் சுற்றுச்சூழலுடன் ஒன்றித்து வாழும் நடைமுறையான வழிகள் குறித்து திறந்த விவாதத்தில் ஈடுபட்டனர். பணியாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை, நடைமுறை அறிவுரைகளை மற்றும் சமூகத்தில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தும் யோசனைகளை பகிர்ந்தனர்.

ஒரு சிறப்பு செபமும் நம்பிக்கையின் செய்தியும், எதிர்கால தலைமுறைகளுக்காக பூமியை பாதுகாக்கும் ஒத்த பொறுப்பை வலியுறுத்தியது.

முடிவில், திரு குடா கூறினார்: “இயற்கை, அதற்கு ஒப்படைக்கப்பட்ட விதிகளை பின்பற்றுகிறது. நாம் அதை எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றாலும், இயற்கை தன் சமநிலையை மீட்டெடுக்கும். நீங்கள் அதை பாதுகாக்க இயலாவிட்டாலும், குறைந்தபட்சமாக அதை சேதப்படுத்தாதீர்கள்.”

நிகழ்ச்சி, பங்கேற்பாளர்களிடையே இயற்கையுடன் உறவை வலுப்படுத்தும் உறுதியுடன், அமைதியான மற்றும் நிலைத்த உலகத்திற்காக ஒன்றாக செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிறைவடைந்தது.