பசுமைப் பயணம் : மரம் நடு விழா  | Veritas Tamil

பசுமைப் பயணம் : மரம் நடு விழா 
 

தமிழகத் திருஅவையின் துறவறப் பேரவை மற்றும் சேலம் மறைமாவட்ட துறவறப் பேரவை  ஏற்பாடு, சேலம்இ கண்ணங்குறிச்சியில் நவம்பர் 24, 2025 அன்று மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குதல் என்ற பொதுவான நோக்கத்துடன் நடைபெற்ற இந்த விழாவில், வனத்துறை அதிகாரிகள், சேலம் ரோட்டரி சங்கங்களின் உறுப்பினர்கள், பல்வேறு துறவற சபைகளைச் சார்ந்த அருட்பணியாளர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் பலர் ஒன்றிணைந்து ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நட்டனர். 

பசுமையான,


இந்த விழாவில், சேலம் மறைமாவட்டத் துறவறப் பேரவையின் தலைவரான அருள்முனைவர். ராயன் ச.ச. அவர்கள் அனைவரையும் வரவேற்று, இந்த 'பசுமைப் பயணம்' நிகழ்வின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் குறித்து விளக்கவுரையாற்றினார். இயற்கையைப் பாதுகாத்தல், பல்லுயிர்களைப் பேணுதல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இக்கூட்டு முயற்சி கொண்டுள்ள ஆழமான அர்ப்பணிப்பை இந்த பசுமைப் பயணம் பிரதிபலிக்கிறது. 


பங்கேற்ற அனைவரும் இந்தச் சூழல் முயற்சிக்குத் தங்கள் நேரம், சக்தி மற்றும் நல்லெண்ணத்தை மனமுவந்து வழங்கினர். பங்கேற்பாளர்கள் அனைவரும், "இந்த மரக்கன்றுகளைத் தொடர்ந்து கவனித்து, அவை நமது சமூகத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் வலிமையான, உயிரூட்டும் மரங்களாக வளரச் செய்வோம்" என்று உறுதியளித்தனர்.