சுற்றுச்சூழல் கல்வி மற்றும் படைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட போர்கோ லவ்ததோ சி பார்வையிட்ட திருத்தந்தை14-ஆம் லியோ.

மே 30 அன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ, திடீர் பயணமாக காஸ்டெல் காந்தொல்போவில் உள்ள திருத்தந்தையின் அதிகார இல்லத்திற்கு சென்றார். அங்கு, திருத்தந்தை பிரான்சிஸ் தொடங்கிய, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் படைத்தல பராமரிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட "போர்கோ லவ்ததோ சி " திட்டத்தை பார்வையிட்டார்.
"போர்கோ லவ்ததோ சி" அல்லது "லவ்ததோ சி கிராமம்", வரலாற்று சிறப்புமிக்க திருத்தந்தையின் தோட்டங்கள் (Papal Villas) பகுதியில் அமைந்துள்ளது. இது முழுமையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான ஒரு மாதிரியாக செயல்படுகிறது — இது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ஆம் ஆண்டு வெளியிட்ட "லவுடாதோ சி" என்ற சுற்றறிக்கையின் முக்கியக் கோட்பாடாகும். இந்த இடம் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் இணைதன்மைக்கான மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.திருத்தந்தையின் ஊடக அலுவலகத்தின் தகவலின்படி, திருத்தந்தை மனித மேம்பாட்டுக்கான ஆணையத்தின் துணைச் செயலாளர் கார்டினல் ஃபாபியோ பாஜ்சியோ மற்றும் திட்ட இயக்குநரான அருட்தந்தை மனுவேல் டோராண்டஸ் அவர்கள் வரவேற்றனர்.
தெய்வமாதாவின் தோட்டத்தில் சிந்தனை நிறைந்த ஒரு தருணத்துடன் தனது பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை, பின்னர் பெல்வெடிரே தோட்டங்கள் மற்றும் கிரிப்டோபோர்டிகஸ் எனப்படும் ரோம் பேரரசர் டொமிஷியனால் கட்டப்பட்ட பழமையான ஒரு கூட்ட அரங்கின் சுவடுகளுக்கு சென்றார்.
அங்கு, திருத்தந்தை பியஸ் பன்னிரண்டாம் அவர்கள் இரண்டாம் உலகப்போரின் போது காட்டிய துணிச்சலான செயல்கள்— குறிப்பாக காஸ்டெல்லி ரோமானி பகுதி குண்டுவீச்சுக்குப் பிறகு, 12,000க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைத்தது — குறித்து திருத்தந்தை லியோ பதினான்கு மரியாதையுடன் நினைவு கூறினார்.பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் 2016ல் பொதுமக்களுக்கான அருங்காட்சியகமாக மாற்றிய அப்போஸ்டலிக் அரண்மனை, மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் வாய்ந்த வில்லா பார்பெரினி ஆகிய இடங்களையும் திருத்தந்தை லியோ பார்வையிட்டார், பின்னர் வத்திக்கான் திரும்பினார்.
போர்கோ லவ்ததோ சி திட்டம் அதிகாரப்பூர்வமாக 2023ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்ட இரு சீர்திருத்த ஆவணங்களின் (chirographs) மூலமாக நிறுவப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம் சுற்றுச்சூழல் கல்வியையும், திடமான வளர்ச்சியையும் ஊக்குவிப்பது ஆகும்.இந்த போர்கோ பகுதியில் 20 ஹெக்டேர் பரப்பளவில் பண்ணை நிலங்கள், குளிர்சாதன காடுகள் (greenhouses), மற்றும் கற்றல் வளங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் “பொதுவான வீடு” எனப்படும் உலகை பாதுகாக்கும் ஒரு வாழும் ஆய்வகமாக செயல்படுகின்றன.
மாணவர்கள், தொழிலதிபர்கள், மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆகியோரை வரவேற்பதுடன் மட்டுமல்லாமல், இந்த போர்கோ திட்டம் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு விரிவுபடுத்துகிறது. இதில் குடியேறிகள், பாலியல் வன்முறையிலிருந்து மீண்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் கைதிகள், மற்றும் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளிலிருந்து புறக்கணிக்கப்படும் பிறரும் அடங்குகிறார்கள்.
தாவரவியல், உயிரியல், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறைகளில் நிபுணர்களால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிகள் மூலம், போர்கோ லவ்ததோ சி, தொழில்முனைவு மற்றும் கல்வி பயிற்சிகளை வழங்குகிறது — இதில் தோட்டம் பராமரிப்பு மற்றும் பசுமை நில மேலாண்மை போன்ற பாடநெறிகள் அடங்கும். இவை, பங்கேற்பாளர்களை சக்திவாய்ந்தவர்களாக மாற்றுவதோடு, நிலைத்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன.
திருத்தந்தை லியோ பதினான்காம் அவர்களின் இவ்விழாவான விஜயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் ஆகியவற்றுக்கான திருச்சபையின் தொடர்ந்த அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது — இவை லவுடாதோ சி சுற்றறிக்கையின் மையக் கருத்துகளாக உள்ளன.
படைத்தல பராமரிப்பும், மக்களைப் பாதுகாப்பதும், குறிப்பாக மிகவும் நெகிழ்ந்த நிலையில் உள்ளவர்களைப் பாதுகாப்பதும், ஒன்றுடன் ஒன்றிணைந்த நெறியாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக வத்திக்கான் எடுத்துள்ள உறுதியை, திருத்தந்தையின் உடனடிப் பங்கேற்பு மீண்டும் உறுதி செய்தது.
Daily Program
