திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ளும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு

ஏப்ரல் 26, 2025 சனிக்கிழமை, உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 1:30) வாடிகன் நகரத்தில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் இந்திய ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்மு கலந்து கொள்வார். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸுக்கு இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்துவதில் அவர் இந்திய அரசாங்கத்தையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவார். மத்திய சிறுபான்மை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய சிறுபான்மை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன்  மற்றும் கோவா சட்டமன்ற துணைத் தலைவர் ஜோசுவா டி சௌசா ஆகியோர் அடங்கிய குழுவும் உடன் சென்று உள்ளன.

ஜனாதிபதியுடன், இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பிரமுகர்களும் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள். இந்த இறுதி தமிழக அரசின் பிரதிநிதியாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் மற்றும் திருச்சி எம்.எல்.ஏ. இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இறுதிச் சடங்கில் உலகெங்கிலும் உள்ள அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தந்தை பிரான்சிஸின் உடல் தற்போது புனித பீட்டர் பசிலிக்காவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  அங்கு பொதுமக்கள் மூன்று நாட்களாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். "பிரான்சிஸ்கஸ்" என்ற எழுத்துடன் மட்டுமே குறிக்கப்பட்ட ஒரு எளிய அடக்கம் செய்ய வேண்டும் என்ற அவரது இறுதி விருப்பத்திற்கு இணங்க, புனித மேரி மேஜர் பசிலிக்காவில் அவர் அடக்கம் செய்யப்படுவார்.

Tamil Survey Popup Image