rvapastoralcare

  • வாங்க விளையாடலாம் | Ep 5 | Fr.Prakash SdC | VeritasTamil

    Apr 18, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org​​

    **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • தேசிய கடல்சார் தினம் | April 5

    Apr 05, 2022
    இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதன் நினைவாக 1964 ஆண்டு முதல் ஏப்ரல் 5 ஆம் நாளானது தேசிய கடல்சார் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கையில் உதவிக்கான சர்வதேச நாள் | April 4

    Apr 04, 2022
    ஐநா பொதுசபையானது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி சுரங்கப் பணிகளில் சுரங்க விழிப்புணர்வு மற்றும் உதவிகள் தினமாக அனுசரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று கொண்டாடப்பட்டது.
  • ஒரு தாயின் அசாதாரண ரூபம்! | Interview with Mrs. Deepa Devi

    Apr 01, 2022
    அனைவருக்கும் வணக்கம்.
    என் பெயர் தீபா தேவி.
    நான் ஒரு சிறப்பு கல்வி ஆசிரியர்.
    அதுமட்டுமில்லாமல் எனக்கு மற்றுமொரு தகுதியும் இருக்கிறது.
    நான் ஒரு சிறப்பு குழந்தைக்கு தாயும் கூட.
  • முட்டாள்கள் தினம் | April 1

    Apr 01, 2022
    நாமெல்லாம் பள்ளிப் பருவத்தில் சக நண்பர்களிடம், வீட்டில் உள்ளவர்களிடம் அன்று ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது. அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் மறக்க முடியாது. உன் சட்டையிலே என்ன கறி? உன் பின்னே பாம்பு? என்று ஆரம்பித்து பல ஏமாற்றுக் கேள்விகளை நண்பர்களிடம் சொல்லி...ஏமாற்றி விளையாடி இருப்போம்.. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.
  • சர்வதேச போதைப்பொருள் சோதனை நாள் | march 31

    Mar 31, 2022
    மார்ச் 31, 2017 அன்று, போதைப்பொருள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு, பாதுகாப்பான போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதல் சர்வதேச போதைப்பொருள் சோதனை தினத்தை நடத்தியது. போதைப்பொருள் சோதனை என்பது, பயனர்கள் தாங்கள் உட்கொள்ள விரும்பும் பொருட்களின் உள்ளடக்கம் மற்றும் தூய்மையைக் கண்டறிய அனுமதிப்பதன் மூலம் போதைப்பொருள் நுகர்வு பாதிப்பைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும். பாதுகாப்பானவைகளை தேர்வுசெய்யவும், அதிக ஆபத்தான பொருள்களை தவிர்ப்பதற்கும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இருபது நாடுகளில் போதைப்பொருள் சோதனைச் சேவைகள் உருவாக்கப்பட்டும், பல நாடுகளில் பரிசீலிக்கப்பட்டும் வருகின்றன.
  • சர்வதேச திருநங்கைகளின் தினம் | March 31

    Mar 31, 2022
    சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் பார்வைத்திறன் தினம் (TDOV என்றும் அழைக்கப்படுகிறது) திருநங்கைகளைக் கொண்டாடுவதற்கும் உலகளவில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்புகளை உணர்த்துவதற்கும் ஏற்படுத்தப்பட்டது.
  • சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள் | March 24

    Mar 24, 2022
    சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம் (International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று நினைவுகூரப்படுகிறது.
  • உலக வானிலை ஆராய்ச்சி தினம் | March 23

    Mar 23, 2022
    வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில தகவல்கள்தான். வானிலை பற்றிய மாற்றங்களையும், இயற்கையைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உலக வானிலை தினம் (றுழசடன ஆநவநழசழடழபiஉயட னுயல); நமக்குச் சொல்வது.
  • நீரின்றி அமையாது உலகு

    Mar 22, 2022
    1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ஆம் நாள் உலக நீர்வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
  • உலக கவிதை தினம் | March 21 | World Poetry day

    Mar 21, 2022
    ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 1999 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதியை உலக கவிதை தினமாக அறிவித்தது. முதல் முறையாக, கவிதை தினம் 1938 இல் அமெரிக்க மாநிலமான ஓஹியோவில் தோன்றியது.
  • உலக மனநலிவு நோய் தினம் | March 21

    Mar 21, 2022
    உலக மனநலிவு நோய் (டவுன் சிண்ட்ரோம்) 2006 ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 21 வது குரோமோசோமின் மும்மடங்கின் (ட்ரைசோமி) தனித்துவத்தை குறிக்க தேர்வு மூன்றாம் மாதம் தேர்வுசெய்யப்பட்டது.
  • உலக காடுகள் தினம் | March 21 | World Forest Day

    Mar 21, 2022
    1971 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 ஆம் ஐரோப்பியன் விவசாய மாநாட்டில் காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு மார்ச் 21ஆம் தேதி காடுகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுசபையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும மார்ச் மாதம் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் (World Forest Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
  • உலக சிட்டுக்குருவிகள் தினம் | March 20

    Mar 20, 2022
    நவீன கட்டிட அமைப்பானது சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. தெருக்களில் தேவையான தானியங்கள் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. நிலம், நீர் மாசுகாரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. ஆகவே, சிட்டுக்குருவிகள்மீது விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சிட்டுக்குருவிகள் தினம் 2010 ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 20 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
  • உலக தூக்க நாள் | World Sleep Day | march 18

    Mar 18, 2022
    உலக தூக்க நாள்
    கடைசியாக இரவு 9 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா? கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? 8 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால் 9 மணிக்குள் உறங்கிப்போவோம். அது ஒரு காலம்.
  • உலகளாவிய மறுசுழற்சி தினம் | Global Recycling Day | March 18

    Mar 18, 2022
    உலகளாவிய மறுசுழற்சி தினம்
    உலக மறுசுழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது. முதன் முதலில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதிப்புமிக்க முதன்மை வளங்களைப் பாதுகாப்பதில் மறுசுழற்சியின் பங்கு மிகவும் முக்கியமானது. மறுசூழற்சி முறையை அங்கீகரிப்பதும் அதனை செயல்படுத்த உதவுவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
  • சர்வதேச கணித தினம் |International Mathematics Day

    Mar 14, 2022
    சர்வதேச கணித தினம்
    கணிதத்தின் சிறப்பு, முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கணிதத்தின் அடிப்படை பங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.

  • நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் | International Day of Action for Rivers

    Mar 14, 2022
    நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம்
    மார்ச் 1997 இல் குரிடிபா பிரேசிலில் அணைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதல் சர்வதேச கூட்டம் நடைபெற்றது. அதில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் மார்ச் 14 அன்று நடைபெறும் என்று முடிவு செய்தனர். இந்த சர்வதேச நதிகளுக்கான நடவடிக்கை தினத்தின் நோக்கம், அழிவுகரமான நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராக ஒருமித்த குரலை எழுப்புவதும், நமது நீர்நிலைகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதும், நமது நதிகளின் சமமான மற்றும் நிலையான நிர்வாகத்தைக் கோருவதும் ஆகும்.
  • புகைபிடிக்காத நாள் | March 09

    Mar 09, 2022
    புகைபிடிக்காத நாள்
    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வார புதன்கிழமை உலக புகை பிடிக்காத தினம் (ழே ளுஅழமiபெ னுயல) அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிகரெட், சுருட்டு அல்லது பீடி போன்ற புகையிலை பொருட்களின் உயிர்கொல்லும் தீங்கினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த அபாயகரமான பழக்கத்திலிருந்து மறுவாழ்வுபெற முயற்சிப்பவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலக வன உயிரினங்கள் தினம்

    Mar 03, 2022
    உலக வன உயிரினங்கள் தினம்
    உலகின் பல்லுயிர்ச்சூழலில் வனவிலங்குகளும் செடிகொடிகளும்
    முக்கிய அங்கம் வகிக்கின்றன. வன உயிர்களுக்கு அருகில் வசிக்கு
    மனிதர்கள் அடையும் பல நன்மைகளை இந்நாளில் எடுத்துக்கூறுகிறார்கள்.
    மனித நடவடிக்கைகளின்மூலம் விலங்குகளும் செடிகளும்
    பாதிக்கப்படுகின்றன. தற்போது இருக்கும் உயிரினங்களில் சுமார் 25
    விழுக்காடு வரும் ஆண்டுகளில் அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாகச்
    சொல்லப்படுகிறது.